| 1680. | ‘புக்குப் பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று, ஒலிமேல் கைக்கண் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன், அக் கைக் கரியின் குரலே அன்ற ஈது’ என்ன வெருவா, ‘மக்கள் - குரல்’ என்று அயர்வேன், மனம் நொந்து, அவண் வந்தனெனால். |
‘(அது கேட்டு) புக்கு - ஆற்றில் நுழைந்து; பெரு நீர் நுகரும் - மிகுதியானநீரைக் குடிக்கும்; பொரு போதகம் என்று - போரிடும் யானை என்று கருதி (அவ்ஓசைவழியே); கைக்கண் கணை சென்றது அலால் - கையின்கண் இருந்த அம்பு சென்றதேஅல்லாமல்; கண்ணின் தெரியக் காணேன் - கண்ணால் நன்கு விளங்கப் பார்க்காத நான்; (அலறும் ஒலி வந்தவுடன்); ‘ஈது அக் கைக்கரியின் குரல் அன்று’ என்ன வெருவா - இதுநாம் நினைத்த துதிக்கை உடைய யானையின் ஒலி அன்று என்று கருதிப் பயந்து; ‘மக்கள் குரல்’ என்று அயர்வேன் - மனிதக் குரல் என்று கருதிச் சோர்ந்து; மனம் நொந்து -மனம் வருந்தி; அவண் வந்தனென் - நீர் முகக்கும் துறைக்கு வந்தேன்.’ விழுந்து அலறிய போதுதான் மனிதக் குரல் என்று வேறுபாடு அறிந்தேன். நடுங்கினேன்என்றான். ‘ஆல்’ அசை. 75 | 1681. | ‘கையும் கடனும் நெகிழக் கணையோடு உருள்வோற் காணா, மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட, மேல் வீழா, ‘ஐய! நீதான் யாவன்? அந்தோ! அருள்க” என்று அயர, பொய் ஒன்று அறியா மைந்தன், “கேள் நீ ” என்னப் புகல்வான். |
‘கையும் கடனும் நெகிழ - கையும் குடமும் நெகிழ்ந்து விலக; கணையோடுஉருள்வோன் காணா - அம்போடு தரையில் உருளுகின்ற முனிமகனைக் கண்டு; மெய்யும் தனுவும்மனனும் வெறிது ஏகிட - (என்) உடலும் வில்லும் மனமும் வெறுமையாகிச் செல்ல; மேல்வீழா - மேலே விழுந்து; ‘அந்தோ! - ஐயோ; ஐய! - ஐயனே; நீ தான்யாவன் - நீ யார்; அருள்க’ - சொல்வாயாக;’ என்று அயர - என்றுகேட்டுச் சோர்வடைய; பொய் ஒன்று அறியா மைந்தன் - |