பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 229

தேவர்கள் கூட்டம் எதிர்வந்து வரவேற்க; இறந்து விண்ணிடை - இறந்து
மேல்உலகத்தின்கண்;  ஏகினன் - சென்றான்:

     வாட்டம் தரும் நெஞ்சு - தன்னைப் பிரிந்தமையால் கண் இழந்த
பெற்றோர் முதுமையில்உதவுவாரின்றி வாடுவர் என்பது பற்றிய வாட்டம்
என்க.  இறுதி ‘ஏ’ காரம் ஈற்றசை.                               81

1687.‘ “அறுத்தாய் கணையால் எனவே,
     அடியேன்தன்னை, ஐயா!
கறுத்தே அருளாய், யானோ
     கண்ணின் கண்டேன் அல்லேன்,
மறுத் தான் இல்லான் வனம்
     மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்;
பொறுத்தே அருள்வாய்!” என்னா,
     இரு தாள் சென்னி புனைந்தேன்.

     ‘ஐயா! - ஐயனே; கணையால் அறுத்தாய் எனவே - (என் மகனை)
அம்பால்எய்து அழித்தாய் என்று;  அடியேன் தன்னை - அடியேனை;
கறுத்தே அருளாய் -கோபித்து விடாமல் இருப்பாயாக; மறுத்தான்
இல்லான்
- களங்கம் சிறிதும் இல்லாதவனாயநின்மகன்; வனம்
மொண்டிடும்  ஓதையின் -
நீரை முகக்கின்ற  ஓசையினால்;  எய்தது
அலால் -
அம்பு எய்தது அல்லாமல்;  யானோ கண்ணில் கண்டேன்
அல்லேன் -
யான்கண்ணால் பார்த்து  (அம்பு எய்தேன் அல்லேன்);
பொறுத்து அருள்வாய்’ - (இந்த எனதுபிழையைப்) பொறுத்தருள்வாயாக;
என்னா - என்று;  இரு தாள் - (அம்முனிவனது) இரு திருவடிகளையும்;
சென்னி புனைந்தேன் - (விழுந்து வணங்கி) என் தலைமேல்
சூடிக்கொண்டேன்.

     கறுத்தல்- கோபித்தல். “கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள்” (தொல்.
சொல்.372.) என்பது காண்க. அருளுதல் துணைவினை. கறுத்தருளாய் என
ஒன்றாக்குக.  பெரியோர் செயலைச்சொல்லும் இடத்து ‘அருளாய் ’ எனும்
சொல் வரும். அருளாய் என்பதில் ஆகாரம் எதிர்மறை.              82

1688.‘வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்;
     “விழி போயிற்று, இன்று” என்றார்;
ஆழ்ந்தார் துன்பக் கடலுள்;
     “ஐயா! ஐயா!” என்றார்;
“போழ்ந்தாய் நெஞ்சை” என்றார்;
     “பொன்நாடு அதனில் போய், நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம்;
     வந்தேம்! வந்தேம்! இனியே.”