பக்கம் எண் :

230அயோத்தியா காண்டம்

     (மகன் இறந்தான் என்பது கேட்ட அவ் இரு முதுகுரவரும்) ‘வீழ்ந்தார்
அயர்ந்தார்புரண்டார் -
தரையில் விழுந்து  சோர்வு அடைந்து
புரண்டார்கள்;  ‘இன்று விழிபோயிற்று’ என்றார் - இன்றைக்கு எங்கள்
கண்கள் போயின என்றார்; துன்பக் கடலுள்ஆழ்ந்தார் - துன்பம் எனும்
பெருங்கடலுள் மூழ்கினர்; ‘ஐயா! ஐயா’ என்றார் -(மகனை நினைத்து)
ஐயனே ஐயனே என்றார்; ‘நெஞ்சைப் போழ்ந்தாய்’ என்றார் -(எங்கள்)
மனத்தைப் பிளந்துவிட்டாய் என்றார்;  ‘நீ  பொன்நாடு அதனில் போய்
வாழ்ந்தே இருப்பத் தரியேம்’ -
நீ பொன்னுலகம் சென்று  அங்கு
வாழ்ந்து  இருப்ப நாங்கள்தனித்திருக்க மாட்டேம்;  இனியே  வந்தேம்,
வந்தேம் -
இப்பொழுதே வந்துவிட்டோம்,  வந்து விட்டோம்  (என்ற
புலம்பினர்.)

     இறந்த மகனின் பெற்றோர்கள் புலம்பினர். இனி ஒரு செயலும் செய்ய
இயலாதவர்களாகஆனோம்  என்பது  கருத்து.                     83

1689.‘என்று என்று அயரும் தவரை,
     இரு தாள் வணங்கி, “ யானே
இன்று உம் புதல்வன்; இனி, நீர்
     ஏவும் பணி செய்திடுவேன்;
ஒன்றும் தளர்வுற்று அயரீர்;
     ஒழிமின் இடர்” என்றிடலும்,
“வண் திண் சிலையாய் கேண்மோ”
     எனவே, ஒரு சொல் வகுத்தான்:

     ‘என்று என்று - இவ்வாறு பலபடியாகப் புலம்பி;  அயரும் -
சோர்வடைகிற; தவரை - முனிவரை; இருதாள் வணங்கி - திருவடிகளில்
வணங்கி;  யானே இன்றுஉம் புதல்வன் - நான் இன்று முதல் உங்கள்
மகன் ஆவேன்;  இனி நீர் ஏவும்பணிசெய்திடுவேன் - இனி மேல்
நீங்கள் இடும் கட்டளையைச் செய்து  முடிப்பேன்;  ஒன்றும்தளர்வுற்று
அயரீர் -
சிறிதும் சோர்வடையாதீர்; இடர் ஒழிமின்’- துன்பம்நீங்குங்கள்;
என்றிடலும் - என்று சொல்லவும்;  ‘வன் திண் சிலையாய்! -வலிய
கட்டமைந்த வில்லை உடையவனே; கேண்மோ’ - கேட்பாயாக; எனவே -
என்று; ஒரு சொல் வகுத்தான் - (அம்முனிவன்) ஒரு வார்த்தை
சொன்னான்.

     ‘யானே’ ‘ஏ’ காரம் தேற்றம். ஒழிமின் - முன்னிலைப் பன்மை
வினைமுற்று. ‘கேண்மோ’ -‘மோ’ முன்னிலை அசைச்சொல். காமம்
செப்பாது  கண்டது  மொழிமோ’  (குறுந்.2) என்புழிப் போல.          84

1690.‘ “கண்ணுள் மணிபோல் மகவை
     இழந்தும் உயிர் காதலியா,