| | உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என் என்று உரையார்? விண்ணின்தலை சேருதும் யாம்; எம்போல், விடலை பிரிய, பண்ணும் பரி மா உடையாய்; அடைவாய், படர் வான்” என்னா. |
‘கண் உள் மணி போல் மகவை இழந்தும் - கண்ணிற்குள்ளே உள்ள கருமணிப் பாவைபோன்ற சிறந்த மகனை இழந்த பிறகும்; உயிர் காதலியா - உயிர்மேல் ஆசை வைத்து; உண்ண எண்ணி இருந்தால் - உண்பதற்கு நினைத்து (உலகில் வாழ்ந்து) இருந்தால்; உலகோர் என் என்று உரையார்? - உலகில் உள்ளவர்கள் (எங்களை) என்னவென்று பழியார்; யாம் விண்ணின்தலை சேருதும் - நாங்களும் (இறந்து) மேல் உலகம் சேர்கிறோம்; பண்ணும் பரிமா உடையாய் - அலங்கரிக்கப் பெற்ற குதிரையை உடைய மன்னனே; எம்போல் - எங்களைப் போல; விடலை பிரிய - மகன் பிரிந்து செல்ல; படர்வான் அடைவாய்’ - அகன்ற வானுலகை அடைவாயாக; என்னா - என்று சொல்லி. உலகோரது பழிமொழிக்கு அஞ்சி யாங்கள் வானுலகு சேர்வோம் என்று மனைவியையும்,உளப்படுத்தி முனிவன் கூறினான் - ‘கண்ணிற் கருமணி’ என்றான் மகனை; இதுவரை இவர்களுக்குப்பார்வையாக இருந்தவன் ஆதலின். 85 | 1691. | ‘ “ தாவாது ஒளிரும் குடையாய்! ‘தவறு இங்கு இது; நின் சரணம், காவாய்’ என்றாய்; அதனால், கடிய சாபம் கருதேம்; ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடர் உற்றனை நீ போவாய், அகல் வான்” என்னா, பொன் நாட்டிடை போயினரால். |
‘தாவாது ஒளிரும் குடையாய்! - கெடாது ஒளிவீசும் வெண்குடை வேந்தே; ‘இங்குஇது தவறு, நின் சரணம், காவாய்’ என்றாய் - இங்கு நான் செய்த இச்செயல் என் தவறே,நின் திருவடியைப் புகலாக அடைந்தேன், என்னைக் காப்பாற்று என்று சொன்னாய்; அதனால் - (குற்றத்தை ஒப்புக்கொண்டு) சரணம் அடைந்தமையால்; கடிய சாபம் கருதேம் -கொடிய சாபம் கொடுக்கக் கருதவில்லை; ஏவா மகவைப் பிரிந்து - கட்டளை இடவேண்டாது குறிப்பறிந்து செய்யும் நன்மகனைப் பிரிந்து; இன்று எம்போல் - இன்று நாங்கள் |