துன்பப்படுவது போல்; இடர் உற்றனை - துன்பம் அடைந்தனையாய்; நீ அகல் வான்போவாய் - நீ அகன்ற வானத்தை அடைவாய்; என்னா - என்று சாபம் தந்து; பொன் நாட்டிடை போயினர் - விண்ணுலகம் சென்றார்கள். ‘கடிய சாபம்’ என்பது ‘பிள்ளை இறக்க’ என்று சொல்லாமல், பிள்ளை பிரிய என்றுசொல்லியது கருதி. ‘எம்போல்’ என்றாலும், பிள்ளை இறப்பதை நீக்கிய உவமை; நாங்கள் உயிர்துறப்பது போல் நீயும் உயிரிழப்பாய் என்று சுட்டும் அளவில் நின்றது. ‘ஆல்’ ஈற்றசை. 86 | 1692. | ‘சிந்தை தளர்வுற்று, அயர்தல் சிறிதும் இலெனாய், “இன் சொல் மைந்தன் உளன்’ என்றதனால், மகிழ்வோடு இவண் வந்தனெனால்; அந்த முனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும், எம்தம் உயிர் வீகுதலும், இறையும் தவறா’ என்றான். |
‘சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் - மனம் தளர்ந்து சோர்வடைதல்சிறிதும் இல்லாமல்; இன் சொல் மைந்தன் உளன்’ என்றதனால் - இனிய சொற்களைப்பேசும் மகன் பிறப்பான்’ என்பது அவன் சாபத்தால் ஏற்பட்டதனால்; இவண் -நகரத்துக்கு; மகிழ்வோடு வந்தனென் - மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தேன்; அந்த முனி சொற்றமையின் - அந்த முனிவன் சொன்னபடியால்; அண்ணல் வனம் போகுதலும் -இராமன் (என்னைப்) பிரிந்து காடு செல்லுதலும்; எம்தம் உயிர் வீகுதலும் - என்னுடைய உயிர் போவதும்; இறையும் தவறா’ - சிறிதளவும் மாறா; என்றான் - மகன் இன்றி இருந்த தயரதனுக்கு முனிவன் சாபம் மகன் உண்டு என்பதை உணர்த்திற்று என்பதால் அப்போதைக்கு அது மகிழ்ச்சியானதாகவே ஆயிற்று என்றானாம் - மகன் பிறப்பது முனிவன் சாபத்தால் உண்மையாகி நிறைவேறியமையின் மகன்பிரிவதும், தன்னுயிர் போவதும்கூட அச்சாபப்படி நிறைவேறுவது உறுதி என்றான். ‘ஆல் ’ அசை.‘என்றா ன்’ என்றமையவேண்டியது எதுகை நோக்கி எந்தம் என நின்றது. 87 வசிட்டன் அரசவை அடைதல் கலிவிருத்தம் | 1693. | உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல், புரைசை மத களிற்றான் பொற் கோயில்முன்னர், |
|