| | முரைசம் முழங்க, முடி சூட்ட மொய்த்து, ஆண்டு அரைசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான். |
உரைசெய் பெருமை - புகழப்படும் பெருமை உடைய; உயர் தவத்தோர் ஓங்கல் - உயர்ந்த முனிவர்களுக்கெல்லாம் மலைபோல உயர்ந்த வசிட்டன்; புரைசை மத களிற்றான்பொன் கோயில் மன்னர்- மணிகட்டிய கயிற்றை உடைய மத யானையை உடைய மன்னனது அரண்மனைமுன்றிலில்; முரைசம் முழங்க - முரச வாத்தியம் ஒலிக்க; முடி சூட்ட மொய்த்து- இராமனுக்குப் பட்டாபிடேகம் செய்ய நெருங்கி; ஆண்டு - அவ்விடத்தே; அரைசர் - மன்னர்கள்; இனிது இருந்த நல் அவையின் ஆயினான் - இனிமையாக வீற்றிருந்த நல்லசபாமண்டபத்தை வந்து அடைந்தான். இராமனது முடிசூட்டு விழாவை முன்னிட்டு மன்னர்கள் நெருங்கியிருந்த அத்தாணி மண்டபத்துக்குவசிட்டன் வந்து சேர்ந்தான். முன்பே அரசர்கள் கோசலையின் புலம்பல் கேட்டு ‘அவ் ஆறுஅறிவாய் ’ என்ன முனிவன் வந்தவன் ஆதலின், (1639.) அவர்களுக்குச் செய்தி அறிவிக்கச்சென்று சேர்ந்தான் என்க. புரசை என்பது எதுகை நோக்கி‘ புரைசை’ என நின்றது. யானைக்கழுத்தில் இடும் கயிறு என்பது பொருள். முரசம் - முரைசம் போலி. 88 அரசர் முனிவனைக் கேட்டல் | 1694. | வந்த முனியை முகம் நோக்கி, வாள் வேந்தர், ‘எந்தை! புகுதற்கு இடையூறு உண்டாயதோ? அந்தம் இல் சோகத்து அழுத குரல்தான் என்ன? சிந்தை தெளிந்தோய்! தெரி எமக்கு ஈது’ என்று உரைத்தார். |
வாள் வேந்தர் - வாள் உடைய அரசர்; வந்த முனியை முகம் நோக்கி -வந்த வசிட்டனைப் பார்த்து; ‘சிந்தை தெளிந்தோய்! - மனம் தெளிந்த மாமுனிவனே; எந்தை! - எம் தந்தை போல்பவனே; புகுதற்கு இடையூறு உண்டாயதோ? - இராமன்முடிசூட்டு விழாவிற்கு வருதற்கு ஏதேனும் தடை உண்டாகியதா; அந்தம் இல் சோகத்து அழுதகுரல்தான் என்ன? - முடிவில்லாத துன்பத்துடன் கூடிய அழுகையொலி எதனால் ஆகியது; எமக்குஈது தெரி’ - எங்களுக்கு இதனைத் தெரிவிப்பாயாக;’ என்று உரைத்தார் -. |