பக்கம் எண் :

236அயோத்தியா காண்டம்

உண்மைக்கு உறைவிடமான வசிட்ட முனிவனது  வார்த்தை;  செவியில்
சாராத முன்னம்
-(தங்கள்)  காதுகளில் சேர்வதற்கு முன்னமே; ஆராத
காதல் அரசர்களும்
- (இராமனதுமுடிசூட்டு விழாவில்) அடங்காத அன்பை
உடைய அரசர்களும்;  அந்தணரும் - வேதியரும்;  மற்று உள்ள
மாந்தர்களும்
- வேறு உள்ள மனிதர்களும்;  வார் ஆர் முலையாரும் -
கச்சணிந்த தனத்தையுடைய  மகளிரும்;  தயரதனைப் போல் வீழ்ந்தார்-

     மற்றுள்ள மாந்தர்கள் - அமைச்சர்,  சேனைத் தலைவர்,  தூதுவர்
முதலியவர்.  பெண்டிர்துன்பம்  பெரிதாய்த் தோன்றுமாதலின் செய்யுளில்
முதற்கண் உரைக்கப்பட்டது.  தயரதன்தன்மகன் காரணமாகத் துன்பத்தில்
ஆழ்ந்தது  போலவே அத்தகைய அன்புடையவர்கள் இவர்களும்ஆதலின்
‘தயரதனைப் போல் ’ துன்புற்றார் என்றார்.  அதனையே ‘ஆராத காதல்’
எனவும் கூறினார்.                                             92

1698.புண் உற்ற தீயின்
     புகை உற்று உயிர் பதைப்ப,
மண் உற்று அயர்ந்து
     மறுகிற்று, உடம்பு எல்லாம்,;
கண் உற்ற வாரி
     கடல் உற்றது; அந் நிலையே,
விண் உற்றது, எம் மருங்கும்
     விட்டு அழுத பேர் ஓசை.

     உடம்பு எல்லாம் -மக்கள் உடல்கள் எல்லாம்; புண் உற்ற தீயின்-
புண்ணில் பட்ட நெருப்புப் போல; புகை உற்று - அனல் மூச்சு விட்டு;
உயிர் பதைப்ப- உயிர் துடிதுடிக்க; மண் உற்று - நிலத்தில் பொருந்தி;
அயர்ந்து -சோர்ந்து; மறுகிற்று - சுழன்று புரண்டது; கண் உற்ற வாரி -
கண்ணிலிருந்து வந்தநீர்ப்பெருக்கு; கடல் உற்றது - கடலாகப் பெருகியது;
எம் மருங்கும் - எப்பக்கத்திருந்தும்; விட்டு அழுத பேரோசை -
(எல்லோரும்) வாய்விட்டு அழுத குரல் ஒலி;விண் உற்றது - வானத்தை
அடைந்தது.

     ‘உடம்பு எல்லாம் மறுகிற்று’ ஒருமை பன்மை மயக்கம். தொகுதி
ஒருமை எனக் கூறி வழாநிலைஎனலும் ஆம். கண்ணீர்ப் பெருக்கு கடலைச்
சென்று அடைந்தது எனலும்ஆம்.                                93

1699.மாதர் அருங் கலமும்
     மங்கலமும் சிந்தி, தம்
கோதை புடைபெயர,
     கூற்று அனைய கண் சிவப்ப,