பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 237

 பாத மலர் சிவப்ப,
     தாம் பதைத்துப் பார் சேர்ந்தார் -
ஊதை எறிய
     ஒசி பூங் கொடி ஒப்பார்.

     மாதர்தாம் - மகளிர்; அருங்கலமும்  மங்கலமும்  சிந்தி - அரிய
அணிகலன்களும் மங்கலநாணும் கீழே விழ;  தம் கோதை புடை பெயர -
தம்முடைய கூந்தல்பக்கத்தில்  குலைந்து விழ;  கூற்று  அனைய கண்
சிவப்ப
- யமனை ஒத்த கண்கள்சிவக்க; பாதமலர் சிவப்ப - அடிமலர்
சிவக்க;  ஊதை எறிய - பெருங்காற்று வீசுவதனால்;  ஒசி - ஒடிந்து
வீழ்கின்ற; பூங்கோடி ஒப்பார் - பூங்கொடியைஒத்தவர்களாய்; பதைத்துப்
பார் சேர்ந்தார்
- துடித்துப் பூமியில் விழுந்தார்கள்.

     ‘பூங்கொடி’  இயல்பில் மெல்லிய மகளிர்க்கு உவமை. இங்கே ‘ஊதை
எறிய’ என்றபடியால், துயர நிலையில் துடித்துத் தரையில்  வீழும்
பெண்களுக்கு  உவமை ஆயிற்று.                                94

1700.‘ஆ! ஆ! அரசன் அருள்
     இலனே ஆம்’ என்பார்;
‘காவா, அறத்தை இனிக்
     கைவிடுவேம் யாம்’ என்பார்; -
தாவாத மன்னர் -
     தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்;
மா வாதம் சாய்த்த
     மராமரமே போல்கின்றார்.

     தாவாத மன்னர் - (வலி) அழியாத அரசர்;  ஆ! ஆ! - அந்தோ!
அந்தோ; அரசன் - தசரதன்;  அருள் இலன்ஆம்’ - இரக்கம்
இல்லாதவன்; என்பார்-; யாம் இனி அறத்தைக் காவா கைவிடுவேம்’-
நாங்கள் இனிமேல்  தருமத்தைப்பாதுகாக்காமல் கைவிட்டு விடுவோம்;
என்பார்-; மா வாதம் சாய்த்த மராமரமேபோல்கின்றார் - பெருங்
காற்றால் வீழ்த்தப்பட்ட ஆச்சா மரத்தைப் போன்றவராய்;தலைத் தலை-
மண்மேல்;  வீழ்ந்து  ஏங்கினார் - விழுந்து  அழுதார்.

     தயரதன் தருமம் காத்து அவலத்திற் பட்டதால், இனி இத்தருமத்தை
யாமும் கைவிடுவோம் என்றார். ‘இலனே’ ‘ஏ’ காரம் தேற்றம். தலைத் தலை-
முதல்தலை இடப்பெயர். இராண்டாவது  தலை ஏழன் உருபு - தாமிருந்த
இடத்தின்கண்  விழுந்து  அழுதார் ’என்பது பொருள்.               95