துளி; பூந்தரளம் - அழகிய முத்து; மா தாம்பு அற்று என்ன - சிறந்த கயிறுஅறுந்து ஒவ்வொன்றாக விழுவது போல; உக - சிந்த; ஏங்கினார் - அழுதார்கள். எழுத்து விளங்காத மழலைப் பேச்சு என்பார் ‘நா தாம் பற்றா மழலை’ என்றார். ‘ வாயில்பல் வெளித் தோன்ற அழுதார்’ என்பது அவலத்தின் உச்சம். இளமகளிர் நாணத்தாற் சிறந்தவர்ஆதலின் பல் வெளித் தோன்ற நகுதலும் செய்யார், இன்று பல் வெளித் தோன்ற அழுகின்றனர்என்பதாம். இதனை இவள் மன்னும் ஒள்நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்; முன்நுனைதோன்றாமை முறுவல் கொண்டு அடக்கித் தன், கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி, யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண்பல் மீயுயர் தோன்ற நகா அ நக்காங்கே, .....உண்கண்ஆயிதழ் மல்க அழும ’் என்னும் (கலித். 142. 6 -12) பாடற் பகுதி கொண்டு விளங்க அறிக. கழுத்தில் அணிந்த முத்துவடக் கயிறு அறுந்து ஒவ்வொரு முத்தாக மார்பில் விழுவது போலக்கண்ணீர்த் துளி முலைத்தலை வீழ்கிறது என்றார். 97 | 1703. | ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும் காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர் மாவும் அழுத; - அம் மன்னவனை மானவே. |
அம் மன்னவனை மான - (இராமன் பிரிவால் துயர் உறும்) தசரதனை ஒப்ப; ஆவும்அழுத - பசுக்கள் அழுதன; அதன் கன்று அழுத - அப் பசுக்களின் கன்றுகள் அழுதன; அன்று அலர்ந்த பூவும் அழுத - அப்போது மலர்ந்த பூக்களும் அழுதன; புனல் புள் அழுத- நீர்வாழ் பறவை இனங்கள் அழுதன; கள் ஒழுகும் காவும் அழுத - தேன் சிந்தும் மலர்ச்சோலைகள் அழுதன; களிறு அழுத - யானைகள் அழுதன; கால் வயப் போர் மாவும் அழுத- காற்றை ஒத்த வலிய போர் வல்ல குதிரைகளும் அழுதன. ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் வரை அனைத்தும் இராமனது பிரிவால் அழுதன என்பார் முதலும் முடிவும் கூறினார். 98 | 1704. | ஞானீயும் உய்கலான் என்னாதே, நாயகனைக் ‘கான் ஈயும் ’ என்று உரைத்த கைகேசியும், கொடிய |
|