பக்கம் எண் :

242அயோத்தியா காண்டம்

உடையவர்கள் யார் உளர்;’  என்பார் -.

     முடிசூடுதல் என்ற பேச்சு வரவில்லையானால் வனம் செல்லும்
துயர்நிலை இராமனுக்கு வந்திராதேஎன்னும் ஆதங்கத்தால் முடியே
இடையூறாகித் தீங்கு செய்தது  என்பாராயினர்.

1708.‘ஆதி அரசன், அருங்
     கேகயன் மகள்மேல்
காதல் முதிர, கருத்து
     அழிந்தான் ஆம்’ என்பார்;
‘சீதை மணவாளன்
     தன்னோடும் தீக் கானம்
போதும்; அது அன்றேல்,
     புகுதும் எரி’ என்பார்.

     ‘ஆதி அரசன் - மூல முதல் வேந்தனான தயரதன்; அருங்கேகயன்
மகள்மேல்
-அரிய கைகேயிமாட்டு; காதல் முதிர - அன்பு முற்றுதலால்;
கருத்து  அழிந்தான் ஆம்- மனம் மயங்கி அறிவு
தடுமாறிவிட்டான்போலும்;’ என்பார்-; ‘சீதை மணவாளன்தன்னோடும்
தீக்கானம் போதும்
- (நாம்) சீதைக்கு நாயகனான இராமனோடு கொடிய
காட்டிற்குப் போவோம்; அது அன்றேல் - அது முடியாமற் போகுமானால்;
எரி புகுதும் - நெருப்பில் வீழ்ந்து  உயிர் விடுவோம்;’ என்பார் - .

     ஆதி அரசன் - தசரதன்,  பிரதான மன்னன் என்பதாம். “ஆதி
மன்னனை ஆற்றுமின்நீர்” என்று (1837.) வருதல் காண்க.            103

1709.கையால் நிலம் தடவி,
     கண்ணீர் மெழுகுவார்
‘உய்யாள் போல் கோசலை’ என்று,
     ஓவாது வெய்து உயிர்ப்பார்;
‘ஐயா! இளங்கோவே!
     ஆற்றுதியோ நீ’ என்பார்;
நெய் ஆர் அழல் உற்றது
     உற்றார், அந் நீள் நகரார்.

     அந்நீள் நகரார் - அந்தப் பெரிய அயோத்தி நகரத்தில் உள்ளவர்கள்;
கையால் நிலம் தடவிக் கண்ணீர் மெழுகுவார் - கையால் தரையைத்
தடவித் தம் கண்ணீர்கொண்டு அதனை மெழுகுவாராயினர்; ‘கோசலை
உய்யாள்’ என்று
- ‘இனிக் கோசலை பிழைக்கமாட்டாள்’ என்று சொல்லி;
ஓவாது வெய்து உயிர்ப்பார் - இடைவிடாமல்