பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 257

     இராமனை வனம் போகச் சொன்ன கோபம் கொண்டு  எந்தை
என்னாமல் தயரதனை ‘நுந்தை’என்றான். சொன்ன சொல்லைப் பகையாளர்
பேச்சைக் கேட்டு மாற்றிய இவ்விடத்தில் அல்லவாகோபம் வரவேண்டும்.
வேறு  எவ்விடத்தில் இனிக் கோபம் விளைவது?  என்றான் இலக்குவன்
என்க.  நித்திலம் - முத்து,  இங்கே பற்களைக் குறித்தது.             126

1732.‘நின்கண் பரிவு இல்லவர்
     நீள் வனத்து உன்னை நீக்க,
புன்கண் பொறி யாக்கை
     பொறுத்து, உயிர் போற்றுகேனோ -
என் கட்புலமுன் உனக்கு
     ஈந்துவைத்து, “இல்லை” என்ற
வன்கண் புலம் தாங்கிய
     மன்னவன் காண்கொல்?’ என்றான்.

     ‘என் கண்புல முன் உனக்கு  ஈந்து  வைத்து - என் கண் எதிரே
உனக்கு அரசைக்கொடுத்து; ‘இல்லை’ என்ற- பிறகு உனக்கு அரசு இல்லை
என்று சொல்லிய;  வன் கண் புலம்தாங்கிய மன்னவன் காண்கொல்?-
கொடுந் தன்மை உடைய தயரதனோ யானும்;  நின்கண்பரிவு இல்லவர்?-
உன்னிடத்து  அன்பு இல்லாதவர்கள்;  நீள்வனத்து - நீண்டகாட்டில்;
உன்னை நீக்க - உன்னை அனுப்ப (அதன் பிறகும்);  புன்கண் கொறி
யாக்கை பொறுத்து
- பொலிவழிந்த ஐம்பொறிகளை உடைய உடம்பைச்
சுமந்து;  உயிர் போற்றுகேனோ?’ -  உயிரைப் பாதுகாத்து (தயரதன்
போல்) வாழ்வேனா;’  என்றான். -

     இராமனை வனம் அனுப்பித் தயரதன் உயிர் வாழ்வதாக நினைத்தவன்
ஆதலின் நானும்அவ்வாறானவன் அல்லன் என்று  இங்ஙனம் கூறினான்
இலக்குவன்.  வன் - கொடிய,  கண் புலம் -கண்ணாகிய புலம் எனினும்
ஆம்.                                                       127

இராமன் பதில்  

1733.‘ “பின், குற்றம் மன்னும் பயக்கும்
     அரசு” என்றல், பேணேன்;
முன், கொற்ற மன்னன், “முடி
     கொள்க” எனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ? இகல்
     மன்னவன் குற்றம் யாதோ? -
மின் குற்று ஒளிரும் வெயில்
     தீக்கொடு அமைந்த வேலோய்!

     மின் குற்று ஒளிரும் வெயில் தீக் கொடு அமைந்த வேலோய்!-