போல் வினைவலியால் பெற்றோர் அன்பின்மை உடையார் போலத் தோன்றுவர், அவ்வளவேஎன்றானாம். மூவரையும் தாயர் என ஒப்பக் கருதல் பற்றிக் ‘கைகேயியைப் பயந்து நமைப்புரந்தாள்’ என்றான் இராமன். 129 இலக்குவன் பதில் | 1735. | உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க, ‘கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள் மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம், விதிக்கும் விதி ஆகும், என் வில் - தொழில் காண்டி’ என்றான். |
உலையுள் உதிக்கும் உறு தீ என ஊதை பொங்க - (கொல்லன்) உலைக்களத்துள்பிறக்கின்ற மிக்க நெருப்பைப் போல வெப்பமான பெருமூச்சு மேலே பொங்கிவர; ‘கொதிக்கும் மனம் - வெம்புகின்ற மனத்தை; எங்ஙனம் ஆற்றுவென் - எவ்வாறுதணியச் செய்வேன்; கோள் இழைத்தாள் - தீங்கு செய்தவளாகிய கைகேயியின்; மதிக்கும் மதி ஆய் - அறிவுக்கும் அறிவு தருவதாய்; முதல் வானவர்க்கும் - மும் மூர்த்திகளாய தேவர்களுக்கும்; வலிது ஆம் - வலிமையான; விதிக்கும் விதி ஆகும் - (நீ சொல்லிய) ஊழ்வினையையும் வென்று மாற்ற வல்ல ஊழ் ஆகிய; என் வில் தொழில்காண்டி’ - எனது வில்லின் செயலைப் பார்ப்பாயாக;’ என்றான் -. விதியால் விளைந்தது என இராமன் சொல்ல, அந்த விதியையும் மாற்ற வல்ல விதி என்வில் என்றான் இலக்குவன். துடிக்கின்ற மனத்தை ஆற்ற முடியாமல் திணறுகிறேன் என்ற அவதியைமுதலில் வெளிப்படுத்துகிறான்; பின்னர் இதற்கு ஏதாவது முடிவு கண்டால்தான் என்மனம் ஆறும் என்பதாகப் பேசுகிறான். 130 இராமன் தணிப்புரை | 1736. | ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், ‘ஐய! நின்தன் வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்? நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?’ |
|