அவன் - இலக்குவன்; ஆய்தந்து - ஆராய்ந்து; அவ் உரை கூறலும் -அந்தச் சொற்களைச் சொன்ன அளவில் (இராமன் அவனை நோக்கி); ‘ஐய! - தம்பி; மறை தந்த நாவால் - வேதங்களைச் சொன்ன நாக்கினால்; நின்தன் வாய்தந்தனகூறுதியோ? - உன் வாயில் வந்தவைகளைக் கூறுகின்றாயோ, நீ தந்தது - நீஇப்பொழுது (உன் வாயால்) தந்த சொல்; நெறியோர்கண் நிலாதது அன்றே? -நல்நெறியில் நடப்பவர்கள் இடத்தில் நிற்கத்தகாத சொல் அல்லவா; ஈன்ற தாய் தந்தை என்றால் - (உன் கருத்திற்கு மாயாக நடப்பவர்) பெற்ற தாயும் தந்தையும் ஆனால்; அவர் மேல் சலிக்கின்றது - அவரிடத்தில் கோபிப்பது; என்னோ?’ - எப்படிப்பொருந்தும். வேதத்தைக் கற்றுணர்ந்த இலக்குமணன் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றுஅறிந்துள்ளவன். ஆகவே, அன்னைக்கும் தந்தைக்கும் மாறாக வாய்தந்த வார்த்தைகளைப் பேசுதல்நெறியற்றோர் செயலாகும் என்பது இராமன் சொல்லியதாகும். 131 இலக்குவன் பிடிவாதம் | 1737. | ‘நல் தாதையும் நீ; தனி நாயகம் நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறர் இல்லை; பிறர்க்கு நல்கக் கற்றாய்! இது காணுதி இன்று’ என, கைம்மறித்தான் - முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான். |
முற்றா மதியம் மிலைந்தான் - இளம்பிறை அணிந்த சிவபெருமான்; முனிந்தானை- சினங் கொண்ட நிலையடைந்தானை; அன்னான் - ஒத்தவனாகிய இலக்குவன் (இராமனைநோக்கி); ‘நல்தாதையும் நீ - (எனக்கு) நல்ல தந்தையும் நீ; தனி நாயகன் நீ- ஒப்பற்ற தலைவனும் நீ; வயிற்றில் பெற்றாயும் பிறர் இல்லை நீயே - (என்னைப் )பெற்றெடுத்த தாயும் பிறர் யாரும் இல்லை நீயே; பிறர்க்கு நல்கக் கற்றாய் - (எல்லாவற்றையும்) மற்றவர்களுக்குக் கொடுத்து விடக் கற்றவனே; இன்று இது காணுதி -இன்று (நான் உனக்கு அரசைப் பெற்றுத் தருவதாகிய) இதனைப் பார்ப்பாயாக;’ என -என்று சொல்லி; கைம் மறித்தான் - (இராமனைத் ) தடுத்தான். எனக்குத் தந்தையும் தாயும் நீயே, தயரதனும் கைகேயியும் அல்லர்; ஆகையால் உனக்குத்தீமை செய்த அவர்களைத் தண்டிப்பது வேதம் கற்றறிந்தமைக்கு முரணாகாது என்றான் இலக்குவன். இது என்பது ‘எனது வில் தொழில்’ |