பக்கம் எண் :

260அயோத்தியா காண்டம்

     அவன் - இலக்குவன்;  ஆய்தந்து - ஆராய்ந்து;  அவ் உரை
கூறலும்
-அந்தச் சொற்களைச் சொன்ன அளவில் (இராமன் அவனை
நோக்கி);  ‘ஐய! - தம்பி;  மறை தந்த நாவால் - வேதங்களைச் சொன்ன
நாக்கினால்;  நின்தன் வாய்தந்தனகூறுதியோ? -  உன் வாயில்
வந்தவைகளைக் கூறுகின்றாயோ, நீ தந்தது - நீஇப்பொழுது (உன் வாயால்)
தந்த சொல்; நெறியோர்கண் நிலாதது அன்றே? -நல்நெறியில்
நடப்பவர்கள் இடத்தில் நிற்கத்தகாத சொல் அல்லவா; ஈன்ற தாய் தந்தை
என்றால்
- (உன் கருத்திற்கு  மாயாக நடப்பவர்) பெற்ற தாயும் தந்தையும்
ஆனால்;  அவர் மேல் சலிக்கின்றது - அவரிடத்தில் கோபிப்பது;
என்னோ?’ -  எப்படிப்பொருந்தும்.

     வேதத்தைக் கற்றுணர்ந்த இலக்குமணன்  ‘அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்’ என்றுஅறிந்துள்ளவன்.  ஆகவே,  அன்னைக்கும்
தந்தைக்கும் மாறாக வாய்தந்த வார்த்தைகளைப் பேசுதல்நெறியற்றோர்
செயலாகும்  என்பது  இராமன் சொல்லியதாகும்.                    131

இலக்குவன் பிடிவாதம்  

1737.‘நல் தாதையும் நீ; தனி
     நாயகம் நீ; வயிற்றில்
பெற்றாயும் நீயே; பிறர் இல்லை;
     பிறர்க்கு நல்கக்
கற்றாய்! இது காணுதி இன்று’
     என, கைம்மறித்தான் -
முற்றா மதியம் மிலைந்தான்
     முனிந்தானை அன்னான்.

     முற்றா மதியம் மிலைந்தான் - இளம்பிறை அணிந்த சிவபெருமான்;
முனிந்தானை- சினங் கொண்ட நிலையடைந்தானை;  அன்னான் -
ஒத்தவனாகிய இலக்குவன் (இராமனைநோக்கி); ‘நல்தாதையும் நீ -
(எனக்கு) நல்ல தந்தையும் நீ; தனி நாயகன் நீ- ஒப்பற்ற தலைவனும் நீ;
வயிற்றில் பெற்றாயும் பிறர் இல்லை நீயே - (என்னைப் )பெற்றெடுத்த
தாயும் பிறர் யாரும் இல்லை நீயே;  பிறர்க்கு நல்கக் கற்றாய் -
(எல்லாவற்றையும்) மற்றவர்களுக்குக் கொடுத்து  விடக் கற்றவனே;  இன்று
இது காணுதி
-இன்று  (நான் உனக்கு அரசைப் பெற்றுத் தருவதாகிய)
இதனைப் பார்ப்பாயாக;’  என -என்று சொல்லி;  கைம் மறித்தான் -
(இராமனைத் ) தடுத்தான்.

     எனக்குத் தந்தையும் தாயும் நீயே,  தயரதனும் கைகேயியும் அல்லர்;
ஆகையால் உனக்குத்தீமை செய்த அவர்களைத் தண்டிப்பது  வேதம்
கற்றறிந்தமைக்கு  முரணாகாது என்றான் இலக்குவன். இது என்பது ‘எனது
வில் தொழில்’