பக்கம் எண் :

264அயோத்தியா காண்டம்

 மாற்றம் துறந்தான்; மறை நான்கு
     என வாங்கல் செல்லா
நால் தெண் திரை வேலையின்,
     நம்பி தன் ஆணையாலே,
ஏற்றம் தொடங்காக் கடலின்,
     தணிவு எய்தி நின்றான்.

     (இலக்குவன்) மறை நான்கு என வாங்கள் செல்லா நால்
தெண்திரை  வேலையின் நம்பிதன்ஆணையால்
- வேதங்கள் நான்கு
என்று என்றும்  குறைவுபடாத நான்கு கடல்களை உடைய ஆடவர்
திலகமாகிய இராமனது  கட்டளையால்;  சீற்றம் துறந்தான் - சினத்தைக்
கைவிட்டான்; எதிர் நின்று - (இராமன் ) எதிரில் இருந்து;  தெரிந்து -
ஆராய்ந்து; செப்பும் - கூறுகின்ற; மாற்றம் - (தர்க்கவாத) வார்த்தைகளை;
துறந்தான் - கைவிட்டான்; ஏற்றம் தொடங்காக் கடலின் - கரையைக்
கடவாத கடல் போல; தணிவு எய்தி நின்றான்- (சினம்) அடங்கி நின்றான்.

     ‘என்றும்  வற்றாத நாற்பெருங் கடல் போன்ற நான்கு வேதங்களை
உடைய நம்பி’  எனஇயைக்க,  சீற்றத் தணிவுக்குக் கடல் உவமை. அலை
ஓயாது;  ஆயினும்  கட்டுக்குள் நிற்கும்.இலக்குவன் உணர்ச்சி ஓயாது;
ஆயினும், இராமபிரானின் சொல்லுக்குக்கட்டுப்பட்டான்.            137

இராமனும் இலக்குவனும் சுமித்திரை கோயில் சேர்தல்  

1743.அன்னான்தனை, ஐயனும்,
     ஆதியொடு அந்தம் ஒன்றாம்
தன்னாலும் அளப்ப அருந்
     தானும், தன் பாங்கர் நின்ற
பொன் மான் உரியானும்
     தழீஇ எனப் புல்லி, பின்னை,
சொல் மாண்புடை அன்னை
     சுமித்திரை கோயில் புக்கான்.

     ஐயனும் - இராமனும்; ஆதியொடு அந்தம் ஒன்றாம்  தன்னாலும்
அளப்ப அருந் தானும்
- முதலும்  முடிவும் ஒன்றாக உள்ள தன்னாலும்
வரையறுத்துக் கூறமுடியாதுள்ள திருமாலாகிய தானும்; தன் பாங்கர்
***பொன்னிறமான மான் தோலை  உடைய சிவபிரானும்;  தழீஇ என -
தழுவிக் கொண்டாற் போல;  அன்னான் தனை - அந்த இலக்கு