வன் கலை - வலிய ஆடை, மாவுரி - ‘வற்கலா’ என்னும் வடசொல் வற்கலை எனத்தமிழ்முடிபு பெற்றது எனலாம். 142 | 1748. | கார் வானம் ஒப்பான்தனைக் காண்தொறும் காண்தொறும் போய் நீர் ஆய் உக, கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார், ‘பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும் தீரா மனத்தாள் தர, ‘வந்தன சீரம்’ என்றார். |
கார் வானம் ஒப்பான்தனை - மழை மேகத்தை ஒத்த கருமையும் தண்மையும் உடையஇராமனை; காண்தொறும் காண்தொறும் - பார்க்கப் பார்க்க; கண்ணினும் போய் - பார்க்கின்ற கண்ணைக் காட்டிலும் போய்; நீர் ஆய் உக - நீராகிச் சிந்த; நெஞ்சு அழிகின்ற நீரார் - மனம் கெட்டு வருந்துகின்ற தன்மையுடைய ஏவல் மகளிர்(இராமனைப் பார்த்து) ‘பேரா இடர்ப்பட்டு - நீங்க முடியாத துன்பப் பட்டு; அயலார் உறு பீழை கண்டும் - அயலார்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு வைத்தும்; தீரா மன்த்தாள் - தன் கொள்கையிலிருந்து நீங்காத மனம் உடைய கைகேயி; தர -கொடுத்தனுப்ப; வந்தன சீரம் - வந்தனவாகிய மரவுரி இவை; என்றார் - நேரில் இராமனைக் காணும்போது மேலும் நெஞ்சு புண்ணாகிறது அச்சேடியர்களுக்கு. சேடியரது உள்ளத் துயர் இப்பாடலில்ல தெள்ளத் தெளிவு ஆகும். 143 இலக்குவன் மரவுரியை ஏற்றுத் தாயைப் பணிதல் | 1749. | வாள் நித்தில வெண் நகையார் தர, வள்ளல் தம்பி, ‘யாணர்த் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம் பூணப் பிறந்தானும் நின்றான்; அவை போர் விலோடும் காணப் பிறந்தேனும் நின்றேன்; அவை காட்டும் ’ என்றான். | வாள் நித்தில வெண் நகையார் தர- ஒளியுடைய முத்துப் போலும் வெள்ளிய பற்களை உடையாராய ஏவல் மகளிர் கொடுக்க; வள்ளல் - இராமன் தம்பியாயஇலக்குவன்; ‘யாணர்த் திருநாடு இழப்பித்தவர் - புதிய வருவாய்களைச் சிறந்த கோசல நாட்டை |