| | போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை - என்றே ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்’ என்றாள். |
(இராமனுக்கு ஆகிய) அவ்வனம் - அந்தக் காடு; உனக்கு ஆகாதது அன்றால் -நீ செல்லுதற்குத் தகாதது அன்று; இவ் அயோத்தி - இந்த அயோத்தி மாநகர் போன்றதேஆகும்; மா காதல் இராமன் நம் மன்னவன் - சிறந்த அன்பினை உடைய இராமனே (உனக்குஇனி) நம் மன்னனாகிய தயரதன் ஆம்; நம் பூங்குழல் சீதை - நம்முடைய பூக்கள் அணிந்தகூந்தலை உடைய சீதையே; வையம் ஈந்தும் - இராமன் பூமியைப் பரதனுக்குக் கொடுத்துக்காடு செல்லத் துணிந்த பின்னும்; போகா உயிர்த் தாயர் - போகாத உயிரையுடையதாய்மார்கள் ஆவர்; என்று - எனக் கருதி; ஏகாய் - வனத்திற்கு இராமனுடன்செல்வாயாக; இனி இவ்வயின் நிற்றலும் ஏதம்’ - இனிமேல் இங்கே நீ நின்றுதாமதிப்பதும் குற்றமாகும்; என்றாள் - ‘இராமன் இருக்கும் இடம் அயோத்தி’ என்னும் உலக வழக்கையே சுமித்திரை மகனுக்குக்கூறினாள். இராமனையும் சீதையையும் தந்தை தாயாகவும், வனத்தை அயோத்தியாகவும் கருதி இங்குள்ளது போலவே வனத்தில்இரு என்றாளாம். ‘என்றே’ ‘ஏ’ காரம் தேற்றம். 146 | 1752. | பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன்பின் செல்; தம்பி என்னும்படி அன்று, அடியாரினின் ஏவல் செய்தி; மன்னும் நகர்க்கே இவன் வந்திடின், வா; அது அன்றேல், முன்னம் முடி’ என்றனள், வார் விழி சோர நின்றாள். | பின்னும் - மேலும்; பகர்வான் - கூறுவாள்; ‘மகனே! -; இவன்பின்செல் - இந்த இராமன் பின்னால் செல்வாயாக; தம்பி என்னும்படி அன்று - இவன்தம்பி என்கின்ற முறையில் நடந்துகொள்ள அன்று; அடியாரினின் ஏவல் செய்தி - இவன்தொண்டர்களைப் போல இவன் இட்ட பணிகளைச் செய்; மன்னும் நகர்க்கே - நிலைபெற்ற அயோத்தி நகரத்துக்கு; இவன் வந்திடின் வா - இவன் திரும்பி வருவானாயின் நீயும்வருக; அது அன்றேல் - இவன் அயோத்திக்கு வரமுடியாமல் போகுமானால்; முன்னம் முடி’- இவனுக்கு முன்னம் நீ உயிரைத் துறந்துவிடு;’ என்றனள் - என்று |