மீண்டும் தொடர்ந்து சென்ற இராமலக்குவர் வானத்தில் சஞ்சரிக்கும் சூரிய சந்திரரும் பிற கோள்களும் ஒளியுடன் நிலத்தில் விழுந்தது போல விழுந்து கிடந்த இராவணனது மார்புக் கவசத்தைக் கண்டனர். மறித்தும் - மீண்டும். வயங்குற - விளக்கமாக 87 | 3490. | கான் கிடந்தது மறைதர, கால் வயக் கலிமாத் தான் கிடந்துழிச் சாரதி கிடந்துழிச் சார்ந்தார்; ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது; உலகின் வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார். |
கான் கிடந்தது மறைதர - காடு உள்ள இடம் முழுவதும் மறையும்படி; கால் வயக் கலிமாத் தான் கிடந்துழி - காற்றுப் போல் விரைந்து செல்லும் வலிமை படைத்த கடிவாளத்தைப் பூண்ட குதிரைகள் விழுந்து கிடந்த இடத்தையும்; சாரதி கிடந்துழிச் சார்ந்தார் - சாரதி விழுந்து கிடந்த இடத்தையும் சென்று அடைந்தார்கள்; ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது - அந்த இடத்தில் தசையோடு பொருந்தி விளங்குகிற குருதி சிந்திக் கிடந்தது; உலகின் வான் கிடந்தது போல்வது கிடந்துழி - நில உலகில் (சூரிய சந்திரரும் நட்சத்திரங்களும் உடைய) வானம் கிடந்தது போல் (இராவணனது ஒளியுடை அணிகலன்கள் பல கிடந்த இடத்திற்கு; வந்தார் - வந்தனர். தொடர்ந்து சென்ற இராமலக்குவர் குதிரைகள் விழுந்து கிடந்ததையும், தேர்ப் பாகன் இறந்து கிடந்ததையும், ஒளியுள்ள பல அணிகலன்கள் சிந்திக் கிடந்ததையும் கண்டனர். கால் - காற்று, வயக்கலிமா - வலிமை படைத்த கடிவாளத்தை உடைய விலங்கு. 88 | 3491. | கண்டு, அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர்-கவின் ஆர் விண்தலம் துறந்து, இறுதியின் விரி கதிர் வெய்யோன் மண்டலம் பல மண்ணிடைக் கிடந்தென, மணியின் குண்டலம் பல, குலமணிப் பூண்களின் குவியல் |
இறுதியின் - உலக இறுதிக் காலத்தில்; விரிகதிர் வெய்யோன் மண்டலம் பல - ஒளி வீசுகிற சூரிய மண்டலங்கள் பல; கவின்ஆர் விண்தலம் துறந்து - அழகுடைய வானத்தின் இடத்தை விட்டு நீங்கி; மண்ணிடைக் கிடந்தென- |