| | நீண்டேன் மரம் போல, நின்று ஒழிந்த புன் தொழிலேன்; வேண்டேன், இம் மா மாயப் புன் பிறவி வேண்டேனே! |
மாண்டேனே அன்றோ - (இத்தகு செயல்களுக்குக் காரணமான நான்) இறந்தவனையே ஒத்தவனல்லவா? (அவ்வாறு இறக்காமல் இருப்பதற்குக் காரணம்); மறையோர் குறை முடிப்பான் - வேதத்தில் வல்ல முனிவர்களது குறைகளை நீக்குவதான; விரதம் பூண்டேன் - விரதத்தைக் கைக் கொண்டுள்ளேன்; அதனால் உயிர் பொறுப்பேன் - அதனால் உயிரை (உடலில்) கொண்டவனாகி; நீண்டேன் - வாழ் நாள் நீட்டிக்கப் பெற்றுள்ளேன்; மரம்போல நின்று - மரம் போல வளர்ந்து நின்று; ஒழிந்த - யாது ஒரு பயனும் இல்லாத; புன்தொழிலேன் - புல்லிய தொழிலை உடையவனாகிய நான்; இம் மா மாயப் புன் பிறவி - இந்த மயக்கம் நிறைந்த இழி பிறப்பை; வேண்டேன் வேண்டேனே - விரும்பேன் விரும்பேன். முனிவர் குறை தீர்க்க விரதம் பூண்டதே காரணமாக வாழ வேண்டியிருக்கிறதே என்று தன் வாழ்வையே வெறுத்துப் பேசுகிறான். வேண்டேன் வேண்டேன் என்ற அடுக்கு வாழ்க்கை மீது கொண்ட வெறுப்பைக் குறித்தது. 97 | 3500. | 'என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை, சான்றோயை, கொன்றானும் நின்றான்; கொலையுண்டு நீ கிடந்தாய்; வன் தாள் சிலை ஏந்தி, வாளிக் கடல் சுமந்து, நின்றேனும் நின்றேன்; நெடு மரம்போல் நின்றேனே! |
என் தாரம் பற்றுண்ண - என் மனைவி (என்னால் பாதுகாக்கப் படாது) மாற்றானால் பற்றப்பட; ஏன்றாயை - (அவளை மீட்பதற்காக) எதிர்த்துப் போரிட்டவன் ஆகிய; சான்றோயை - சான்றோன் ஆகிய உன்னை; கொன்றானும் நின்றான் - கொன்றவனாகிய பகைவனும் உயிரோடு நின்றான்; நீ கொலையுண்டு கிடந்தாய் - நீயோ கொலைப்பட்டுக் கிடக்கிறாய்; வன்தாள் சிலை ஏந்தி - வலிமையான அடிப்பகுதியை உடைய வில்லினைக் (கையில்) ஏந்தி; வாளிக் கடல் சுமந்து - அம்புகளின் தொகுதியைச் சுமந்து கொண்டு; நின்றேனும் நின்றேன் - நின்றவனாகிய நானும் நின்றேன்; நெடுமரம் போல் நின்றேனே - ஓங்கி வளர்ந்த மரம் போல் நின்றேன் என்றவாறு. கொலையுண்டு நீ கிடந்தாய்' என்ற வரியில் சடாயுவின் இடம் நன்றி உணர்வும், மதிப்புணர்வும் நெடுமரம் போல் நின்றேன் என்ற இடத்து |