பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 637

நீண்டேன் மரம் போல, நின்று
     ஒழிந்த புன் தொழிலேன்;
வேண்டேன், இம் மா மாயப்
     புன் பிறவி வேண்டேனே!

    மாண்டேனே அன்றோ - (இத்தகு செயல்களுக்குக் காரணமான
நான்) இறந்தவனையே ஒத்தவனல்லவா? (அவ்வாறு இறக்காமல்
இருப்பதற்குக் காரணம்); மறையோர் குறை முடிப்பான் - வேதத்தில்
வல்ல முனிவர்களது குறைகளை நீக்குவதான; விரதம் பூண்டேன் -
விரதத்தைக் கைக் கொண்டுள்ளேன்; அதனால் உயிர் பொறுப்பேன் -
அதனால் உயிரை (உடலில்) கொண்டவனாகி; நீண்டேன் - வாழ் நாள்
நீட்டிக்கப் பெற்றுள்ளேன்; மரம்போல நின்று - மரம் போல வளர்ந்து
நின்று; ஒழிந்த - யாது ஒரு பயனும் இல்லாத; புன்தொழிலேன் - புல்லிய
தொழிலை உடையவனாகிய நான்; இம் மா மாயப் புன் பிறவி - இந்த
மயக்கம் நிறைந்த இழி பிறப்பை; வேண்டேன் வேண்டேனே -
விரும்பேன் விரும்பேன்.

     முனிவர் குறை தீர்க்க விரதம் பூண்டதே காரணமாக வாழ
வேண்டியிருக்கிறதே என்று தன் வாழ்வையே வெறுத்துப் பேசுகிறான்.
வேண்டேன் வேண்டேன் என்ற அடுக்கு வாழ்க்கை மீது கொண்ட
வெறுப்பைக் குறித்தது.                                         97

3500.'என் தாரம் பற்றுண்ண
     ஏன்றாயை, சான்றோயை,
கொன்றானும் நின்றான்;
     கொலையுண்டு நீ கிடந்தாய்;
வன் தாள் சிலை ஏந்தி,
     வாளிக் கடல் சுமந்து,
நின்றேனும் நின்றேன்; நெடு
     மரம்போல் நின்றேனே!

    என் தாரம் பற்றுண்ண - என் மனைவி (என்னால் பாதுகாக்கப்
படாது) மாற்றானால் பற்றப்பட; ஏன்றாயை - (அவளை மீட்பதற்காக)
எதிர்த்துப் போரிட்டவன் ஆகிய; சான்றோயை - சான்றோன் ஆகிய
உன்னை; கொன்றானும் நின்றான் - கொன்றவனாகிய பகைவனும்
உயிரோடு நின்றான்; நீ கொலையுண்டு கிடந்தாய் - நீயோ
கொலைப்பட்டுக் கிடக்கிறாய்; வன்தாள் சிலை ஏந்தி - வலிமையான
அடிப்பகுதியை உடைய வில்லினைக் (கையில்) ஏந்தி; வாளிக் கடல்
சுமந்து -
அம்புகளின் தொகுதியைச் சுமந்து கொண்டு; நின்றேனும்
நின்றேன் -
நின்றவனாகிய நானும் நின்றேன்; நெடுமரம் போல்
நின்றேனே -
ஓங்கி வளர்ந்த மரம் போல் நின்றேன் என்றவாறு.

     கொலையுண்டு நீ கிடந்தாய்' என்ற வரியில் சடாயுவின் இடம் நன்றி
உணர்வும், மதிப்புணர்வும் நெடுமரம் போல் நின்றேன் என்ற இடத்து