நாணல் ஆகியவை சடாயுவின் பண்புகளாம். பெயர்த்தேன் -நீக்கிவிட்டேன். உற்றது - வினையாலணையும் பெயர். 101 | 3504. | 'பாக்கியத்தால், இன்று, என் பயன் இல் பழி யாக்கை போக்குகின்றேன்; கண்ணுற்றேன், புண்ணியரே! வம்மின்' என்று தாக்கி அரக்கன் மகுடத் தலை தகர்த்த மூக்கினால் உச்சி முறைமுறையே மோக்கின்றான். |
புண்ணியரே - நல்வினை உடையவர்களே; பயன் இல் - பயன் இல்லாத; பழி என் யாக்கை - பழிப்பதற்குரிய என் உடம்பை; இன்று போக்குகின்றேன் - இப்பொழுது விட்டு விடப் போகிறேன்; பாக்கியத்தால் - (நான் செய்த) புண்ணியத்தால்; கண்ணுற்றேன் - உங்களைக் காணப் பெற்றேன்; வம்மின் என்று - வாருங்கள் என்று (அருகில் அழைத்து); அரக்கன் மகுடத்தலை தாக்கித் தகர்த்த - அரக்கன் ஆகிய இராவணனது மகுடத்தோடு கூடிய தலையைத் தாக்கித் தகர்த்திட்ட; மூக்கினால் - (தன் வலிய) அலகினால்; உச்சி - (அவர்களுடைய) தலை உச்சியை; முறை முறையே மோக்கின்றான் - மாறி மாறிப் பல முறை மோந்திடுபவன் ஆனான். பயன் இல் பழியாக்கை - சீதையை மீட்கப் பயன்படாத உடம்பு. அரக்கன் மகுடத்தலை தகர்த்த - இராவணனுடன் போரிட்டு அவனது கிரீடங்களைக் கீழே தள்ளியதைக் குறித்தது; அதே மூக்கு இராமலக்குவரின் உச்சியை மோந்ததென்க. உச்சி முகர்தல் - பாசமும் அன்பும் உடையார் செயல். 102 | 3505. | 'வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய நெஞ்சகமே முன்னே நினை வித்தது; ஆனாலும், அம் சொல் மயிலை அருந்ததியை, நீங்கினிரோ, எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்?' என்று உரைத்தான், |
வந்த வரவு - (இராவணன் சீதையை எடுத்து) வந்த வரவு; வஞ்சனையால் என்பது - சூழ்ச்சியால் தானிருக்கும் என்பதை; என்னுடைய நெஞ்சகமே - என்னுடைய மனந்தான்; முன்னே நினைவித்தது - முன்பே நினைக்குமாறு செய்தது; ஆனாலும் - ஆயினும்; எஞ்சல் இலா ஆற்றல் இரு வீரும் - குறைவு இல்லாத வலிமை உடைய (நீங்கள்) இருவரும்; அம்சொல் |