பக்கம் எண் :

656யுத்த காண்டம் 

அறிவின் மிக்கான்- அறிவில் மிக்கவனான சாம்பவன்; மாண்டாரை
உய்வி்கும்  மருந்து  ஒன்றும்
 -  இறந்தவரை  உயிர் பெறச்செய்யும்
மருந்து    ஒன்றும்;  உடல்வேறு  வகிர்கள்   ஆகக்   கீண்டாலும்
பொருந்துவிக்கும்  ஒரு மருந்தும்
- உடம்பு வெவ்வேறு பிளவுகளாகக்
கிழிந்தாலும்   முன்போலப்   பொருந்தச்  செய்யும்  ஒரு    மருந்தும்;
படைக்கலங்கள் கிளைப்பது  ஒன்றும்  -  (உடம்பில் தைத்திருக்கும்)
படைக்கலங்களை  வெளிப்படுத்தும் மருந்து ஒன்றும்; மீண்டேயும்  தம்
உருவை  அருளுவது  ஓர்  மெய்ம்  மருந்தும் உள
- மீண்டும் தம்
முன்னைய   உருவையே   கொடுக்கும்  உண்மை  மருந்தும்    அங்கு
உள்ளன;    வீர!   நீ,    ஆண்டு    ஏகிக்   கொணர்தி   என
அடையாளத்தொடும் உரைத்தான்
-  வீரனே!   நீ   அங்கு  சென்று
அவற்றைக்   கொணர்வாயாக”  என   அவற்றின்  அடையாளத்தோடும்
(அனுமனுக்குக்) சொன்னான்.
 

மாண்டாரை   உய்விக்கும் மருந்து, மிருதசஞ்சீவினீ; உடற் கிழிவைப்
பொருந்துவிப்பது;    ஸந்தரனகரணீ;   படைக்கலங்கள்     கிளைப்பது.
விஸல்யகரணீ; மீண்டேயும் தம் உருவை அருளுவது சாவர்ண்ய   கரணீ
- இவை முதனூலிற் கூறப் பெறுபவை.
 

                                                (27)

8730.

‘இன்ன மருந்து ஒரு நான்கும், பயோததியைக்
      கலக்கிய ஞான்று, எழுந்த; தேவர்
உன்னி அமைத்தனர்; மறைக்கும் எட்டாத
       பரஞ்சுடர், இவ் உலகம் மூன்றும்
தன் இரு தாள் உள் அடக்கிப் பொலி போழ்தின்,
       யான் முரசம் சாற்றும் வேலை,
அன்னவை கண்டு, உயாவுதலும், தொல் முனிவர்
       அவற்று இயல் எற்கு அறிவித்தாரால்;*

 

இன்ன  மருந்து ஒரு நான்கும் - இத்தகைய   வாயமருந்து   ஒரு
நான்கும்;    பயோததியைக்   கலக்கிய    ஞான்று     எழுந்த -
பாற்கடலைக்கடைந்த காலத்து, அதிலிருந்து தோன்றின; தேவர் உன்னி
அமைத்தனர்
 -  தேவர்கள் அவற்றின் பயனை நினைத்து   அவற்றை
அம்மலையில் அமையுமாறு செய்தனர்; மறைக்கும் எட்டாத பரஞ்சுடர்
-  வேதங்களுக்கும்  எட்டாத  திருமால்;  இவ்உலகம்  மூன்றும் தன்
இருதாள் உள் அடக்கிப் பொலிபோழ்தின்
- இவ்வுலகம் மூன்றையும்
தன்  இரண்டு  அடிக்குள்  அடக்கிக்  கொண்டு  நின்ற போது;  யான்
முரசம் சாற்றும் வேலை
- நான் வெற்றி முரசை