அடிக்கையில்; அன்னவை கண்டு, உயாவுதலும் - அம் மருந்தினைக் கண்டு அவற்றைப் பற்றிக் கேட்டபோது; தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் - பழமைசான்ற முனிவர்கள் அவற்றின் பண்புகளை எனக்குத் தெரிவித்தனர். ஆல் - அசை. |
(28) |
| 8731. | ‘இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்; இரங்கா, யார்க்கும்; நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமிப் படையும் அவற்றுடனே நிற்கும்; பொய்ம் மருங்கின் நில்லாதாய்! புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி, கைம் மருங்கு உண்டாம்; நின்னைக் காவாய் என்று; அப்புறம் போய்க் கரக்கும்’ என்றான். |
இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்-இந்த மருந்தைக் காத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் கணக்கிலாதன; யார்க்கும் இரங்கா - அவை யார்க்கும் இரக்கம் கொள்ளமாட்டா; நெய்ம் மருங்கு படரகில்லா நெடுநேமிப் படையும் அவற்றுடனே நிற்கும் - நெய்பூசப் பெற்றதும், அருகில் செல்வதற்கும் இயலாததும் ஆகிய நெடிய சக்கரப்படையும் அத்தெய்வங்களுடன் காத்து நிற்கும்; பொய்ம் மருங்கின் நில்லாதாய் - பொய்யின் அருகில் கூட நில்லாதமெய்மை உடையவனே! புரிகின்ற காரியத்தின் பொதுமைநோக்கி - நீ செய்கின்ற செயலின் பொதுத்தன்மையினை நோக்கி; கைம் மருங்கு உண்டாம் - நின் கையருகில் நிற்கும்; நின்னைக் காவாய் என்று அப்புறம் போய்க்கரக்கும் என்றான் - (மேலும்) உன்னை, ‘இம் மருந்தை மீட்டும் கொணர்ந்து கெடாமல் காப்பாயாக’ எனக் கேட்டுக் கொண்டு அப்புறம் போய் மறைந்து கொள்ளும்’. என்று கூறினான். |
(29) |
அனுமன் மருந்து கொணரப் பெருவடிவு கொண்டு எழுதல் |
| 8732. | ‘ஈங்கு இதுவே பணி ஆகில், இறந்தோரும் பிறந்தோரே; எம் கோற்கு யாதும் தீங்கு இடையூறு எய்தாமல், தெருட்டுதிர், போய்’ எனச் சொல்லி, அவரைத் தீர்ந்தான்- |