பக்கம் எண் :

658யுத்த காண்டம் 

ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன்; பொன்
              தோள் இரண்டும் திசையோடு ஒக்க
வீங்கின; ஆகாயத்தை விழுங்கினனே
             என வளர்ந்தான்-வேதம் போல்வான்.
 

‘ஈங்கு இதுவே பணி  ஆகில்  இறந்தோரும்    பிறந்தோரே -
“இப்பொழுது   இதுவே  (நான்  செய்ய  வேண்டிய)   பணி   ஆனால்
இறந்துகிடப்பவர்கள் அனைவரும் மீண்டும் இறப்பு நீங்கி    எழுந்தவரே
ஆவர்” எம்கோமாற்கு  யாதும்  தீங்கு  இடையூறு    எய்தாமல் -
எம்கோமானாகிய   இராமனுக்கு   தீங்குவரத்தக்க   இடையூறு   ஏதும்
எய்தாதபடி;  தெருட்டுதிர்போய்   எனச்   சொல்லி   -    போயத்
தெளிவுபடுத்துங்கள்”   எனக்  கூறி; அவரைத்  தீர்ந்தான்,   வேதம்
போல்வான்
   -   அவர்களை   விட்டு   நீங்கினவனாய்;    வேதம்
போல்பவனாகிய    அனுமன்;  ஓங்கினன்   வான்   நெடுமுகட்டை
உற்றனன்
-     உயர     ஓங்கி     வானத்தின்  நெடிய  முகட்டை
அடைந்தான்; பொன்தோள் இரண்டும்  திசையோடு ஒக்க வீங்கின-
அவன்   தோள்கள்   இரண்டும்   திசைகளின்  அளவோடு    ஒக்கப்
பருத்தன;  ஆகாயத்தை   விழுங்கினனே   என    வளர்ந்தான் -
ஆகாயத்தை  இடமில்லாமல்  விழுங்கிவிட்டான்  என்னுமாறு   பேருரு
எடுத்து வளர்ந்தான்.
 

                                                (30)
 

8733.

கோளோடு தாரகைகள், கோத்து அமைந்த
           மணி ஆரக் கோவை போன்ற;
தோளோடு தோள் அகலம் ஆயிரம்
           யோசனை அளவு சொல்ல ஒண்ணா;
தாளோடு தாள் பெயர்க்க, இடம் இலது-
           ஆயின இலங்கை; தடக் கை வீச,
நீளோடு திசை போதா; விசைத்து எழுவான்
           உருவத்தின் நிலை ஈது அம்மா!

 

கோளோடு தாரகைகள் கோத்து அமைந்த- விண்ணில் விளங்கும்
நவகோள்களும் நட்சத்திரங்களும் (அனுமனது மார்பிற்கு    அணியாகக்)
கோத்து  அமைத்த; மணி ஆரக்கோவை போன்ற - மணியும் முத்தும்
கலந்த  மாலை  போன்று  விளங்கின; தோளோடு  தோள் அகலம் -
ஒருதோளிலிருந்து  மற்றொரு  தோளுக்கு  உள்ள  அகலம்;  ஆயிரம்
யோசனை அளவு  சொல்ல  ஒண்ணா
 - ஆயிரம் யோசனை அளவு
எனவும் சொல்ல