| பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்புஇனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி; அழிந்தன, வானவர் மானம், ஆகாயத்து இடையன பேர் அசனி என்ன விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல், கீறின போய்த் திசைகள் எல்லாம். | மாமழைக்குலங்கள் கிழிந்தன - (அனுமன் விசைத்தெழவே) பெரிய மேகக்கூட்டங்கள் கிழிந்தன; நீண்டகல் வேலை கிழக்கும் மேற்கும் கீண்டது - நீண்டு அகன்றுள்ள தென்கடல் கிழக்கும் மேற்குமாக பிரிந்து கிழிந்தது; மீன் பொழிந்தன; - விண்மீன்கள் உதிர்ந்தன; பொருப்பு இனமும் தருக்குலமும் பிறவும், பொங்கி தொடர்ந்து எழுந்த - மலைத்தொகுதிகளும், மரத்தொகுதிகளும், பிறவும் கிளர்ந்து தொடர்ந்து எழுந்தன; வானவர் மானம் ஆகாயத்து இடையன அழிந்தன - தேவர்களின் விமானம் ஆகாயத்தின் நடுவே அழிந்தனவாய்; பேர் அசனி என்ன நீர்க் கடல் அழுந்த விழுந்தன -பெரிய இடியைப் போல நீர்க்கடலில் அழுந்த விழுந்தன; மேல் ஏறின போய்த்திசைகளெல்லாம் கீறின - அதனால் கடல்நீர் மேல் ஏறின வாய்த் திசைகளெல்லாம் கிழிந்தன. | (33) | | 8736. | பாய்ந்தனன், அங்கு அப்பொழுதத்தே; பரு வரைகள் எனைப் பலவும் வடபாகத்துச் சாய்ந்தன; ‘பேர் உடல் பிறந்த சண்டமா- ருதம் வீச, தாதை சால ஓய்ந்தனன்’ என்று உரைசெய்ய, விசும்பூடு படர்கின்றான், உரு வேகத்தால், காய்ந்தன வேலைகள்; மேகம் கரிந்தன; வெந்து எரிந்த, பெருங் கானம் எல்லாம். | அப்பொழுதத்தே அங்கு பாய்ந்தனன் - அப்பொழுதே அங்கு பாய்ந்தனன்; பருவரைகள் எனைப் பலவும் - பருத்தமலைகள் பலவும்; பேர் உடல் பிறந்த சண்டமாருதம் வீச- பெரிய உடலிலிருந்து தோன்றிய பெருங்காற்று வீசுதலால்; வடபாகத்துச் சாய்ந்தன - வடக்குப் பக்கமாகச் சாய்ந்தன; தாதைசால ஓய்ந்தனன் என்று உரைசெய்ய - தந்தையான வாயுதேவனும் மிகவும் தளர்ச்சியுற்றான் என்று சொல்லுமாறு; விசும்பூடு படர்கின்றான் |
|
|
|