| 8737. | கடல் முன்னே நிமிர்ந்து ஓட, கால் பின்னே தொடர்ந்து ஓட, கடிதின் செல்வான் உடல் முன்னே செல, உள்ளம் கடைக் குழையாய்ச் செல, செல்வான் உருவை நோக்கி, ‘அடல் முன்னே தொடங்கிய நாள், ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் திடல் முந்நீர்இடைப் படுத்து மறித்தலின்; நம் துயர்’ என்றார், தேவர் எல்லாம். |