| மாகத்தின் நெறிக்கு அப்பால், வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி, போகத்தின் நெறி கடந்தார் புகலிடங்கள் பிற்படப் போய், ‘பூவின் வந்த ஏகத்து அந்தணன் இருக்கை இனிச் சேய்த்து அன்- றாம்’ என்ன, எழுந்து சென்றான். |
| 8739. | வான நாட்டு உறைகின்றார், ‘வயக் கலுழன் வல் விசையால், மாயன் வைகும் தான் நாட்டு எழுகின்றான்’ என்று உரைத்தார், சிலர்; சிலர்கள், ‘விரிஞ்சன்தான் தன் ஏனை நாட்டு எழுகின்றான்’ என்று உரைத்தார்; சிலர் சிலர்கள், ‘ஈசன் அல்லால், போன நாட்டிடை போக வல்லாரோ? இவன் முக் கண் புனிதன்’ என்றார். |