எழுகின்றான்’ என்று உரைத்தார் - வேறுசிலர் ‘பிரமன்தான் தன் நாட்டிலும் வேறாகிய நாட்டிற்குச் செல்ல எழுகின்றான்’ என்று சொன்னார்கள்; சிலர்சிலர்கள் ‘ஈசன் அல்லால் போன நாட்டிடைப் போகவல்லாரோ? - சிலர்சிலர், ‘சிவன் அல்லாதவர்கள், மிகவும் உயர்ந்து போன நாட்டிடையே செல்லவல்லவர்களோ? (அல்லர்! ஆதலின்); இவன் முக்கண் புனிதன்’ என்றார் - இவன், மூன்று கண்களையுடைய தூயவனாகிய சிவனே’ என்று சொன்னார்கள். | (37) | | 8740. | ‘வேண்டு உருவம் கொண்டு எழுந்து, விளையாடு- கின்றான்; மெய் வேதம் நான்கும் தீண்டு உருவன் அல்லாத திருமாலே இவன்’ என்றார்; ‘“தெரிய நோக்கிக் காண்டும்” என இமைப்பதன்முன், கட் புலமும் கடந்து அகலும்; இன்னும் காண்மின்; மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும்’ என்றார், மேன்மேல் உள்ளார். | மேன்மேல் உள்ளார் - மேல்மேல் உள்ள உலகத்தவர்கள் சிலர்; வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் இவன் - விரும்பிய உருவந்தாங்கி விளையாடுகின்றவனாகிய இவன்; மெய்வேதம் நான்கும் தீண்டு உருவன் அல்லாத திருமாலே என்றார் - உண்மையான வேதங்கள் நான்கும் எட்டுதற்குரிய வடிவினன் அல்லாத திருமாலே’ என்றார்; ‘தெரிய நோக்கிக் காண்டும்’ என -(சிலர்) ‘தெளிவுற நோக்கிப் பார்ப்போம்’ என்று நினைக்க; ‘இமைப்பதன் முன்கட்புலமும் கடந்து அகலும் - (அவர்களின்) இமைப்பொழுதிற்கு முன்னமே கட்புலத்தைக் கடந்து செல்லுவான்; இன்னும் காண்மின் மீண்டு வரும் தரம் அல்லன் வீட்டுலகம் புகும் என்றார்-(மற்றும் சிலர்) ‘இன்னும் பாருங்கள் இவன் திரும்பிவரும் தன்மையன் அல்லன், வீட்டுலகத்திற்குச் செல்லுவான்’ என்றார். | (38) | | 8741. | ‘உரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘ஒளி’ என்றார், சிலர் சிலர்கள்; ‘ஒளிரும் மேனி அரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘அண்டத்துக்கு அப் புறம் நின்று, உலகம் ஆக்கும் |
|
|
|