பக்கம் எண் :

664யுத்த காண்டம் 

கரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘மற்று’ என்றார்,
       சிலர் சிலர்கள்; கடலைத் தாவிச்
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார்-
        உலகு அனைத்தும் தெரியும் செல்வர்.
 

உலகு அனைத்தும்  தெரியும்  செல்வர்  -    உலகனைத்தையும்
தெரிந்துணர்ந்த  ஞானச்  செல்வராகிய  பெரியோர்;  கடலைத் தாவிச்
செருவென்றான்  நிலை  ஒன்றும்  தெரியகிலார்
- கடலைத் தாண்டி
அரக்கரைப்  போரில் வென்றவனாகிய அனுமனது நிலையைச்   சிறிதும்
தெரியாதவர்களாயினர்  ஆதலால்; சிலர்  சிலர்கள்  ‘உரு’  என்றார் -(மனோவேகத்தையும்  விஞ்சிச்  செல்லுகின்ற  அனுமனை)    சிற்சிலர்
உருவப்பொருளே  என்றார்கள்; சிலர்  சிலர்கள்  ஒளிருமேனி ‘அரு’
என்றார்
 - மற்றும் சிலர் (தம்மைக் கடந்து விரைந்துசென்ற)  அவனது
ஒளிரும் மேனியை அருவப் பொருள் என்று கூறினார்; சிலர்  சிலர்கள்
அண்டத்துக்கு அப்புறம் நின்று  உலகம்  ஆக்கும் ‘கரு’ என்றார்

-இன்னும்   சிலர்  அண்டத்துக்கு  அப்புறத்தில்  நின்று   உலகத்தைப்
படைக்கும்  காரணப்  பொருள்  என்றார்கள்; சிலர் சிலர்கள்  ‘மற்று’
என்றார்
 -  மேலும்  சிலர்  (அவனை) இது வேறு ஒன்றுதான்’  எனக்
கூறினர்.
 

                                                (39)
 

8742.

வாச நாள் மலரோன்தன் உலகு அளவும் 
    நிமிர்ந்தன, மேல் வானம் ஆன
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது
    உருவிடையே கனகத் தோள்கள்
வீச, வான் முகடு உரிஞ்ச, விசைத்து எழுவான்

     உடல் பிறந்த முழக்கம் விம்ம,
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார்;
     விதிர் எறிந்தது, அண்டகோளம்.
 

வாசநாள்   மலரோன்தன்  உலகு அளவும் நிமிர்ந்தன - மணம்
பொருந்திய  அன்றலர்ந்த    தாமரைமலரில்  வாழ்கின்ற  பிரமனுடைய
உலகத்தின்  அளவும்  உயர்ந்தனவாகி; மேல்  வானம்  ஆன காசம்
ஆயின எல்லாம்  கரந்த தனது உருவினிடையே
- அதன் மேலுள்ள
வானமான ஆகாயமெல்லாம்   மறைத்த தன்னுடைய உருவத்தில் உள்ள;
கனகத் தோள்கள் வான்முகடு உரி்ஞ்ச வீச -