பொன்னிறத்தோள்களை வானத்தின் உச்சியில் பட்டுத் தேய்க்கும்படி வீசுதலால்; விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம - விசையால் எழுகின்ற அவனது உடம்பில் பிறந்த முழக்கம மிக; ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் - (அதனால்) திசைக்காவலர்கள் தலைநடுக்கமுற்றனர்; அண்டகோளம் விதிர் எறிந்தது - அண்டமாகிய உருண்டை விதிர் விதிர்ப்பு எய்தியது. | (40) | வேறு | | 8743. | தொடுத்த நாள்மாலை வானோர், முனிவரே முதல தொல்லோர், அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால், அவுணர் வேந்தன் கொடுத்த நாள், அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் எடுத்த நாள் ஒத்தது-அண்ணல் எழுந்த நாள், உலகுக்கு எல்லாம். | அண்ணல் எழுந்தநாள் உலகுக்கெல்லாம் - பெருமை சான்றவனாகிய அனுமன் வளர்ந்து எழுந்த நாள், உலகங்கட்கெலாம்; தொடுத்த நாள் மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் - அன்றலர்ந்த மலர்களைத் தொடுத்த மாலையை அணிந்த தேவர்களும் முனிவர் முதலாய பெரியோர்களும்; அடுத்த நான் மறைகள் ஓதி வாழ்த்தலால் - தமக்குரிய நான்கு வேதங்களை ஓதிக் கொண்டு வாழ்த்துக் கூறி நிற்க; அவுணர் வேந்தன் கொடுத்தநாள் - அவுணர் வேந்தனாகிய மாபலி தாரைவார்த்துக் கொடுத்தநாளில்; அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் எடுத்த நாள் ஒத்தது- உலகத்தை அளந்து கொண்ட வாமன மூர்த்தியின் குறுகிய அளவினை உடைய பாதத்தை (பெரிதாக்கி) விண்ணின் மேல் எடுத்த நாளை ஒத்து மகிழ்வூட்டியது. | (41) | | 8744. | தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும், மூவகை உலகினுள்ளார், உவகையால் தொடர்ந்து மொய்த்தார்; |
|
|
|