பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 665

பொன்னிறத்தோள்களை        வானத்தின்      உச்சியில்    பட்டுத்
தேய்க்கும்படி வீசுதலால்; விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம்
விம்ம
 -  விசையால்  எழுகின்ற  அவனது உடம்பில் பிறந்த முழக்கம
மிக; ஆசை காவலர் தலைகள்  பொதிர்  எறிந்தார்  -  (அதனால்)
திசைக்காவலர்கள்    தலைநடுக்கமுற்றனர்;   அண்டகோளம்   விதிர்
எறிந்தது
- அண்டமாகிய உருண்டை விதிர் விதிர்ப்பு எய்தியது.
 
 

                                                (40)
 

வேறு
 

8743.

தொடுத்த நாள்மாலை வானோர், முனிவரே முதல
                               தொல்லோர்,
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால், அவுணர் வேந்தன்
கொடுத்த நாள், அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம்

எடுத்த நாள் ஒத்தது-அண்ணல் எழுந்த நாள், உலகுக்கு
                                             எல்லாம்.
 

அண்ணல்     எழுந்தநாள்   உலகுக்கெல்லாம்  -   பெருமை
சான்றவனாகிய  அனுமன்  வளர்ந்து எழுந்த நாள்,  உலகங்கட்கெலாம்;
தொடுத்த நாள் மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் -
அன்றலர்ந்த மலர்களைத் தொடுத்த மாலையை அணிந்த   தேவர்களும்
முனிவர்  முதலாய  பெரியோர்களும்;  அடுத்த  நான் மறைகள் ஓதி
வாழ்த்தலால்
 -  தமக்குரிய  நான்கு  வேதங்களை  ஓதிக்  கொண்டு
வாழ்த்துக்  கூறி  நிற்க; அவுணர் வேந்தன் கொடுத்தநாள் - அவுணர்
வேந்தனாகிய   மாபலி   தாரைவார்த்துக்  கொடுத்தநாளில்;   அளந்து
கொண்ட குறளனார் குறிய பாதம் எடுத்த நாள் ஒத்தது
- உலகத்தை
அளந்து  கொண்ட  வாமன மூர்த்தியின் குறுகிய அளவினை   உடைய
பாதத்தை   (பெரிதாக்கி)  விண்ணின்  மேல்  எடுத்த  நாளை   ஒத்து
மகிழ்வூட்டியது.
 

                                                (41)
 

8744.

தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகினுள்ளார், உவகையால் தொடர்ந்து
                               மொய்த்தார்;