| தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த, பூவுடை அமரர் தெய்வத் தரு என, விசும்பில் போனான். | தேவரும் முனிவர் தாமும் சித்தரும் தெரிவைமாரும்- தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் அவர்தம் மனைவிகளும்; மூவகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார்- மூவுலகத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சி மிகுதியால் தொடர்ந்து வானில் நெருங்கியவர்களாய்த்; தூவின மணியும் சாந்தும் கண்ணமும் மலரும் தொத்த - தூவிய மணிகளும், சந்தனமும், சுண்ணப்பொடியும் மலர்களும் அனுமனின் உடல்மேல் தொத்தி நிற்க; பூவுடை அமரர் தெய்வத் தருஎன விசும்பில் போனான்-தேவர்களுக்குரிய, மலர்கள் நிறைந்ததெய்வத்தன்மையுடைய கற்பகத்தரு என வான்வழியே சென்றான். | (42) | கயிலையைக் கண்டு வணங்கி, அனுமன் செல்லுதல் | | 8745. | இமய மால் வரையை உற்றான்; அங்கு உள இமைப்பிலோரும், கமையுடை முனிவர், மற்றும் அறன் நெறி கலந்தோர், எல்லாம், அமைக, நின் கருமம்!’ என்று வாழ்த்தினர்; அதனுக்கு அப்பால், உமையொருபாகன் வைகும் கயிலை கண்டு, உவகை உற்றான்.* | இமையமால் வரையை உற்றான் - அனுமன் இமயம் என்னும் பெரிய மலையை அடைந்தான்; அங்குஉள இமைப்பிலோரும் கமையுடை முனிவர் - அங்கு வாழும் இமையாக்கண்ணராகிய தேவர்களும், பொறுமையுடைய முனிவர்களும்; மற்றும் அறன்நெறி கலந்தோர் எல்லாம் - மேலும் அறநெறி வழுவாப் பெரியோரும், ஆகிய அனைவரும்; ‘அமைக, நின் கரும்ம!’ என்று வாழ்த்தினர் - (அனுமனைப் பார்த்து) ‘நீ மேற்கொண்டுள்ள செயல் இனிது நிறைவேறுவதாக’ என்று வாழ்த்தினார்கள்; அதனுக்கு அப்பால் உமையொரு பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் - அதன் பின்னர் உமையம்மையை இடப்பாகங் கொண்ட சிவ |
|
|
|