‘இவன் எழுந்த தன்மை என்?’ என்று உலகு ஈன்றான் கேட்ப - “இவன் வான்வழி எழுந்து செல்வதற்கு யாது காரணம்?” என்று உலகத்தை ஈன்ற உமையவள் கேட்க; மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான் - “மன்னவர் குலத்துத் தோன்றிய இராமனின் தூதனாகிய இவன் மருந்தைக் கொண்டு போக வந்திருக்கின்றான்’; ‘வஞ்சர் தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்!’ - “வஞ்சகராகிய அரக்கர்க் குரிய தென் இலங்கையினால் உளதாகிய தீமை இனித்தீர்வது திண்ணம்’; நன்னுதல்! நாளை நாமும் சேர்ந்து வெம்போர்காணுதும் என்றான் - “அழகிய நுதலை உடையவளே! நாளை நாமும் (தேவர்களுடன்) சேர்ந்து கொடிய போரைக் காண்போம்” என்று கூறினான் பரமன். |
(45) |
ஏமகூடத்தைத் தாண்டி, அனுமன் மேருமலைமீது போதல் |
| 8748. | நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி, ஏமகூடத்தின் உம்பர் எய்தினன், இறுதி இல்லாக் காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்;- நேமியின் விசையின் செல்வான்-நிடதத்தின் நெற்றி உற்றான். |
நேமியின் விசையின் செல்வான் - சக்கரப்படைபோல விரைவாகச் செல்லுகின்ற அனுமன்; நாம ஆயிரம் யோசனைகள் கொண்டது நடுவு நீங்கி - பெயர்பெற்ற (ஒன்பதின்) ஆயிரம் யோசனைத் தொலைவு கொண்ட நடுவிடத்தைத் தாண்டி; ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் - ஏம கூட மலையின் மேல் அடைந்து நின்று; இறுதி இல்லாக் காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்- முடிவில்லாத காமஇன்பத்தையே துய்க்கின்ற செல்வச் சிறப்பினை உடைய தேவர்களின் கூட்டத்தைக் கண்டான்; நிடதத்தின் நெற்றி உற்றான் - பின்பு நிடத மலையின் உச்சியை அடைந்தான். |
(46) |
| 8749. | எண்ணுக்கும், அளவு இலாத அறிவினோர் இருந்து நோக்கும் கண்ணுக்கும், கருதும் தெய்வ மனத்திற்கும், கடியன் ஆனான், |