பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 669

மண்ணுக்கும், திசைகள் வைத்த வரம்பிற்கும், மலரோன்
                                       வைகும்
விண்ணுக்கும், அளவை ஆன மேருவின்மீது சென்றான்.

 

எண்ணுக்கும்     அளவு  இலாத  அறிவினோர்   -  (மனிதர்)
எண்ணத்திற்கும்   அளவிட  முடியாத  அறிவினை உடைய  ஞானிகள்;
இருந்து  நோக்கும் கண்ணுக்கும்  -  இருந்தவாறே எல்லாவற்றையும்
நோக்குகின்ற   ஞானக்கண்ணுக்கும்;  கருதும்  தெய்வ  மனத்திற்கும்
கடியன்  ஆனான்
- எல்லாவற்றையும் கருதவல்ல தெய்வ மனத்திற்கும்
பின்பற்ற   முடியாத வேகத்தை உடையவனான அனுமன்; மண்ணுக்கும்
திசைகள்    வைத்த     வரம்பிற்கும்
   -    மண்ணுலகத்திற்கும்,
திசைகளுக்குரியவாகவைத்த    எல்லைக்கும்;   மலரோன்    வைகும்
விண்ணுக்கும்
    -     பிரமன்    தங்கியுள்ள    பிரமலோகமாகிய
விண்ணுலகத்திற்கும்; அளவை  ஆன  மேருவின்  மீது சென்றான் -
அளவு கருவி போல் உளதான மேரு மலையின் மீது போனான்.
 

                                               (47)
 

                 பிரமன் முதலிய தேவர்களை வணங்கிச் செல்லுதல்
 

8750.

‘யாவதும் நிலைமைத் தன்மை  இன்னது’  என்று, இமையா
                                        நாட்டத்
தேவரும் தெரிந்திலாத வடமலைக்கு உம்பர்ச் சென்றான்;
நாவலம் பெருந் தீவு என்னா நளிர் கடல் வளாக வைப்பில்,
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தைக்
                                     கண்டான்.*
 

இமையா    நாட்டத்   தேவரும் - இமையாத விழிகளைப் பெற்ற
தேவர்களும்; ‘நிலைமைத்   தன்மை   இன்னது’  என்று  யாவதும்
தெரிந்திலாத
 -   நிலையாக  உள்ள  தன்மையாவது  எனச்  சிறிதும்
தெரியவியலாத; ‘வடமலைக்கு  உம்பர்  சென்றான்’  - மேருமலைக்கு
மேலே  சென்று; நளிர்கடல்  வளாக  வைப்பில் - குளிர்ந்த கடலால்
சூழப்பட்ட   பூமியில்;  நாவலம்   பெருந்தீவு  என்னா  -  நாவலம்
பெருந்தீவு என்று;   காவல்  மூன்று  உலகும்  ஓதும்  கடவுள்  மா
மரத்தைக் கண்டான்
- காவலை உடைய மூன்று உலகத்தாரும்