பக்கம் எண் :

670யுத்த காண்டம் 

சிறப்பித்துக்  கூறுவதற்குக்  காரணமான  தெய்வத்தன்மையை  உடைய
பெரிய நாவல் மரத்தைக் கண்டான்.
 

                                                (48)
 

8751.

அன்ன மா மலையின்   உம்பர்,  உலகு  எலாம்  அமைத்த
                                         அண்ணல்
நல் நெடு நகரம் நோக்கி, அதன் நடு நாப்பண் நாம
பொன் மலர்ப் பீடம்தன்மேல் நான்முகன் பொலியத்
                                    தோன்றும்
தன்மையும் கண்டு, கையால் வணங்கினான்-தருமம்
                                 போல்வான்.*
 

தருமம்   போல்வான் - தருமதேவதை போன்றவனான  அனுமன்;
அன்னமாமலையின் உம்பர் - அந்த மேருமலையின் உச்சியில்; உலகு
எலாம் அமைத்த அண்ணல்  நல்நெடு நகரம் நோக்கி
- உலகங்கள்
அனைத்தையும்   படைத்த  பிரம தேவனுடைய சிறந்த நகரைப்பார்த்து;
அதன் நடு நாப்பண்  நாம  பொன்மலர்ப் பீடம்தன்மேல் - அதன்
நட்ட  நடுவில்  புகழ்பெற்ற  பொன்மலர்ப்பீடத்தின் மேல்;  நான்முகன்
பொலியத்   தோன்றும்
  -   நான்முகக்கடவுள்   பொலிவு  பெற்றுத்
தோன்றும்  தன்மையைக்;  கண்டு  கையால்  வணங்கினான் - கண்டு
தன்கைகளால் வணங்கினான்.
 

                                                (49)
 

8752.

தரு வனம் ஒன்றில், வானோர் தலைத்தலை மயங்கித் தாழ,
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க,
மரு விரி துளவ மோலி, மா நிலக் கிழத்தியோடும்
திருவொடும் இருந்த, மூலத் தேவையும் வணக்கம்
                                     செய்தான்.

 

தருவனம்   ஒன்றில்   வானோர் தலைத்தலை  மயங்கித்தாழ-
(பின்னர் அனுமன்) மரங்கள் நிறைந்துள்ள   வனமொன்றில்   தேவர்கள்
இடந்தொறும்  இடந்தொறும்  கலந்து  வணங்கி  நிற்க;   பொரு  அரு
முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க
-ஒப்பற்ற முனிவர்கள்
வேத  மந்திரங்களோடு  புகழ்ந்து  சொல்லும்  ஒலி  மிக்குத்  தோன்ற;
மருவிரிதுளவ மோலி மாநிலக்கிழ்த்தியோடும் -