மணம் வீசும் துளவமாலை அணிந்த முடியினை உடையனாய்ப் பூதேவி யோடும்; திருவொடும் இருந்த மூலத்தேவையும் - சீதேவியோடும் இருந்த எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ள நாராயணனையும்; வணக்கம் செய்தான் - வணங்கினான். |
(50) |
| 8753. | ஆயதன் வட கீழ்ப் பாகத்து, ஆயிரம் அருக்கர் ஆன்ற காய் கதிர் பரப்பி, ஐந்து கதிர் முகக் கமலம் காட்டி, தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த சேயிழை பாகத்து, எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான். |
ஆயதன் வடகீ்ழ்ப் பாகத்து - (பின்னர்) அம்மேருவின் வட கிழக்கில்; ஆயிரம் அருக்கர் ஆன்ற காய்கதிர் பரப்பி - ஆயிரம் சூரியர்களின் நிறைந்த ஒளிவீசும் கதிர்களைப் பரப்பிக் கொண்டு; ஐந்து கதிர்முகக் கமலம் காட்டி - ஐந்து ஒளிவாய்ந்த முகங்களாகிய தாமரைகளைக் காட்டிக் கொண்டு; தூயபேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த - தூயவான பெரிய உலகங்கள் மூன்றிலுள்ளோரும் அருச்சனையாகத் தூவிய மலர்களால் சூழப் பெற்று; சேயிழை பாகத்து எண்தோள் ஒருவனை வணக்கம் செய்தான் - செம்மையான அணிகலன்களை அணிந்த மனோன்மணியை இடப்பாகத்தில் கொண்டுள்ள எட்டுத் தோள்களை உடைய சதாசிவனைக் கண்டு வணக்கம் செய்தான். |
கயிலையில் உருத்திர மூர்த்தியை உமையாளொடும் வணங்கிய அனுமன் இங்கு சதாசிவனைக் கண்டு வணங்குகின்றான். ஐந்து முகங்களாவன, (1) அகோரம் (2) வாமனம் (3) தத்புருஷம் (4) ஈசானம் (5) சத்தியோசாதம் என்பன. “மேருவரையதற்கு நடுப்பிரமன் மூதூர் மிக்க மனோவதி, அதற்கு மேலைத்திக்கில், நாரணண் வாழ் வைகுண்டம், வட கீழ் பாலின் நாதன் அமர் சோதிட்கம்; திசைகள் எட்டும் சீரிய இந்திரன் முதலாம் எண்மர் தேயம்” (கந்தபுரா-அண்டகோசப்-30) என்ற பகுதி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
|
(51) |
| 8754. | சந்திரன் அனைய கொற்றத் தனிக் குடை தலையிற்று ஆக, சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூற்ற, |