பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 673

செத்திய இருள் இன்றாக, விளங்கிய செயலை நோக்கி,
வித்தகன், ‘விடிந்தது!’ என்னா, ‘முடிந்தது, என் வேகம்!’
                                      என்றான்.

 

அத்தடங்கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல் -  அந்தப்
பெரிய   மேருமலையை    விட்டு   நீங்கி  அப்பக்கத்தை   அடைந்த
அனுமன்;  உத்தரகுருவை  உற்றான்  -  உத்தர  குரு  என்ற  போக
பூமியை அடைந்தான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி - அங்கு,  ஒளியை
உடைய  சூரியன்  தன் கதிர்களைப் பரப்பி; செத்திய இருள் இன்றாக
விளங்கிய  செயலை  நோக்கி
 - நெருங்கிய  இருள் இல்லையாம்படி
செய்து   கொண்டு   விளங்கிய   செயலைப்   பார்த்து;    வித்தகன்,
“விடிந்தது!” என்னா,  முடிந்தது,   என்வேகம்!’      என்றான்
-
திறமைமிக்கவனாகிய  அனுமன்,  பொழுது  விடிந்து   விட்டது   என்று
கருதி, ‘என் வேகம் முடிந்துவிட்டது’ என வருந்திக் கூறினான்.
 

                                                (54)
 

8757.

‘ஆதியான் உணராமுன்னம் அரு மருந்து உதவி, அல்லின்
பாதியால், அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச்
சோதியான் உதயம் செய்தான்; உற்றது ஓர் துணிதல்
                                     ஆற்றேன்;
ஏது யான் செய்வது? என்னா, இடர் உற்றான், இணை
                                     இலாதான்.

 

இணை இலாதான் - ஒப்பற்றவனாகிய அனுமன்; ஆதியான் உணரா
முன்னம்  அருமருந்து உதவி
- ஆதிமூர்த்தியாகிய இராமன்  மூர்ச்சை
தெளிதற்கு  முன்பே அரிய மருந்தினைக் கொண்டு போய்க்   கொடுத்து;
அல்லின்பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச் -
இரவின் பாதியிலேயே அத்துன்பத்தை நீக்க  எண்ணி  இருந்த  எனக்கு;
சோதியான் உதயம்  செய்தான்  -  பேரொளியை  உடைய கதிரவன்
உதயஞ்  செய்து  விட்டான்; உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்- இனிப்
பொருந்திய   செய்ல  இன்ன  தென்பதைத்  துணிய  இயலாதவனாக
இருக்கின்றேன்; ‘ஏது யான் செய்வது?’ என்னா இடர் உற்றான் -