(இப்போது) ‘யான் செய்ய வேண்டுவது எது?’ என்று வருத்தமடைந்தான். | (55) | | 8758. | கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான்,-’கதிரின் செல்வன் மேல் திசை எழுவான்அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு மாற்றினன், வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் சாற்றினர்’ என்ன, துன்பம் தவிர்ந்தனன்-தவத்து மிக்கான். | தவத்து மிக்கான் - தவத்தாற் சிறந்தவனும்; கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான் - காற்றின் வேகம் குறையுமாறும் திசையின் தொலைவு சுருங்குமாறும் செல்லுகின்ற விரைவினை உடையவனுமாகிய அனுமன்; கதிரின் செல்வன் மேல் திசை எழுவான் அல்லன் - கதிரினைச் செல்வமாக உடைய சூரியன் மேற்குத் திசையில் எழுகின்ற இயல்புடையவன் அல்லன்; விடிந்ததும் அன்று; மேருமாற்றினன் - இப்போது விடியற்காலமுமில்லை; மேருவில் தன் செலவை மாற்றினவனாய்; வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் சாற்றினர் - வடபுறத்தில் (உள்ளார்க்கு மேற்குத்திசையில்) தோன்றும் என்பது, வேதம் பயின்றவர்கள் கூறியுள்ளனர்; என்ன, துன்பம் தவிர்ந்தனன் - என்று எண்ணித் துன்பம் தணிந்தான். | (56) | உத்தரகுரு நாட்டைக்கண்டு, அனுமன் அப்பால் போதல் | | 8759. | இருவரே தோன்றி, என்றும் ஈறு இலா ஆயுள் எய்தி, ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி, பொரு அரும் இன்பம் துய்த்து, புண்ணியம் புரிந்தோர் வைகும், திரு உறை கமலம் அன்ன, நாட்டையும் தெரியக் கண்டான். | இருவரே தோன்றி, என்றும் ஈறுஇலா ஆயுள் எய்தி - (ஆண் பெண் என்ற) இருவரே பிறந்து, என்றும் முடிவிலாத ஆயுளைப் |
|
|
|