8762.
| அல் குன்ற அலங்கு சோதி அம் மலை அகலப் போனான், பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான், புலவன் சொன்ன நல் குன்றம் அதனைக் கண்டான், உணர்ந்தனன்-’நாகம முற்ற எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம்’ என்ன. |
அல்குன்ற அலங்கு சோதி அம்மலை அகலப்போனான்-இருளும் (தன் முன்னர்) ஒடுங்குமாறு (மிகக் கருநிறத்துடன்) விளங்கும் சோதியையுடைய அம்மலை பின்னிடுமாறு கடந்து சென்றவனாகிய; பொன்குன்றம் அனயை தோளான் நோக்கினான் - பொன்மலைபோன்ற தோளினை உடைய அனுமன் கண்களால் நோக்கி; புலவன் சொன்ன நல்குன்றம் அதனைக் கண்டான் - அறிஞனாகிய சாம்பவன் சொன்ன நல்லமருந்துமலையைக் கண்டு; தெய்வமருந்து அடையாளம் நாகம் முற்ற எல்குன்ற எறியும் என்ன உணர்ந்தனன் -தெய்வத்தன்மை வாய்ந்த மருந்துக்கு அறிகுறி, மேலுலகம் முழுவதும் சூரியனுடைய ஒளி குறையுமாறு ஒளிவிடுவது என்ன ஊகித்துத் தெரிந்து கொண்டான். |
(60) |
மருத்து மலையை அனுமன் பெயர்த்து எடுத்து மீளுதல் |
| 8763. | பாய்ந்தனன்; பாய்தலோடும், அம் மலை பாதலத்துச் சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன, கடுத்து வந்து, காய்ந்தது, ‘நீதான் யாவன்? கருத்து என்கொல்? கழறுக!’என்ன, ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச் சொன்னான். |
பாய்ந்தனன் பாய்தலோடும் - (மருத்துமலையைத் தெரிந்த அனுமன்) அந்த மலைமீது பாய்ந்தான், அங்ஙனம் பாய்ந்த உடனே; அம்மலை பாதலத்துச் சாய்ந்தது - அம் மருத்துமலை பாதலத்தில் சாய்ந்தது; காக்கும் தெய்வம்சலித்தன - (அம் மருந்துகட்குக்) காவலாக இருந்த தேவதைகளும் மனம் தளர்ந்தன; கடுத்து வந்து காய்ந்தது - (பிறகு தேறி) விரைந்துவந்து சினங |