பக்கம் எண் :

 கம்பராமாயணக் கதைப் பாத்திரங்கள்783

கம்பராமாயணக் கதைப் பாத்திரங்கள்
 

அக்ககுமரன்

:

இராவணன், மண்டோதரியின் மகன், இந்திரசித்தின் தம்பி.

அக்கினி தேவன்

:

சீதை தீயில் புக, அவளைச் சுடாது இராமனிடம் சேர்ப்பித்தவன்.

அகத்திய முனிவர் 

:

'குறுமுனி' தமிழ் முனி எனவும் குறிப்பர். கானகத்தில் இராமனுக்குப் படைக்கலம் அளித்தவர்.

அசும்பன்

:

(1) கரன் படை வீரருள் ஒருவன். தீ நிமித்தம்
கண்டு கரனை எச்சரித்தவன்.
(2) இராவணன் துணைவருள் ஒருவன். நரசிங்கம் அனையான்.

அகலிகை

:

கௌதம முனிவரின் பத்தினி. கல்லாய்க்
கிடந்தவள். இராமன் கால் பட்டுச் சாபம் தீர்ந்தவள்.

அங்கதன்

:

இந்திரன் அமிசமாக வாலிக்குத் தாரையிடம்
பிறந்தவன். இராவணனிடம் தூது சென்றவன்.

அங்காரதாரை

:

கடல் மேல் செல்வார் நிழல் கண்டு,
அவர்களைப் பிடித்து உண்ணக் கூடியவள்.
''சாயாக்கிரகிணி' என்பது அவளது மற்றொரு
பெயர். அநுமன் கடல் தாவுகையில் குறுக்கிட்டுத்,
தோற்ற அரக்கி.

அசங்கன்

:

வானரப் படைத்தலைவன்.

அசமஞ்சன்

:

சகரனின் புதல்வன். தாய் விதர்ப்ப தேசத்து
அரசன் மகள், விதர்ப்பை எனும் கேசினி. பகீரதனின் பாட்டனார்.

அசன்

:

அயன். தசரதனின் தந்தை. சுயம்வரத்தில்
இந்துமதியை மணந்தவன்.

அஞ்சனை

:

அனுமனின் தாய்.

அஞ்சுமான்

:

அசமஞ்சன் புதல்வன். சகரனின் பேரன்.