பக்கம் எண் :

784யுத்த காண்டம் 

அத்திரிமுனிவர்

:

பிரம்ம குமாரர்களுள் ஒருவர். காட்டில்
இராம இலக்குவரை உபசரித்தவர்.

அதிகாயன்:

இராவணனுக்குத் தானியமாலையிடம் பிறந்தவன்.
'பெரிய உடம்பை உடையவன்' எனப் பொருள்.

அதிதி:

காசிபன் மனைவி. புத்திரர் 33 கோடி சுரர். 

அம்பரீடன்:

சூரிய குல வேந்தன். நரமேதத்திற்கு ஆள் தேடி
இரிசிக     முனிவரின்   நடுமகன் சுனச்சேபன்
என்பவனைப் பெற்று யாகத்தை முடித்தவன். 

அயோமுகி:

இரும்பினால் ஆகியது போன்ற முகமுடைய
அரக்கி.  இலக்குவன் மீது  காதல் கொண்டு
அழிந்தவள்.

அரம்பை:

1. அருணன் மனைவி.
2. தேவநங்கை இராவணன் ஆட்சியில்
குற்றேவல் செய்தவள். 

அரன்:

வீடணன் அமைச்சர் நால்வருள் ஒருவன்.

அருணன்:

காசியமுனிவருக்கு விநதையிடம் பிறந்தவன்.
மகன் - சடாயு; தம்பி - கருடன். சூரியனின்
சாரதி.

அருந்ததி:

வசிட்டரின் மனைவி. கற்பில் சிறந்தவள். 

அனசூயை:

அழுக்காறு இல்லாதவள். அத்திரி முனிவரின்
பத்தினி.

அனந்தன்:

வானர வீரன்.

அனலன்:

வீடணன் அமைச்சர் நால்வருள் ஒருவன்.

அனிலன்:

வீடணன் அமைச்சர் நால்வருள் ஒருவன்.

அனுமன்:

வாயுவின் மைந்தன். தாய் அஞ்சனை. இளம்
பருவத்தில் சூரியனைப் பழம் எனக் கருதிப்
பறிக்க முற்படுகையில் இந்திரன் வச்சிராயுதத்தால்
அடிக்கப்பட்டுச் சிதைந்த கன்னம் உடையவன்.
(அனு - கன்னம்) இவன் தந்தை கேசரி.

ஆதூர்த்தன்:

குசன் மக்கள் நால்வருள் ஒருவன்.
தருமாரணியம் என்னும் ஊரைத் தலைநகரமாகக்
கொண்டு வாழ்ந்தவன்.

ஆனிறக்
கண்ணன்
:

கவாக்ஷன் பசுவின் கண்ணைப் போன்ற
கண்களை உடையவன். வானரப் படைத்
தலைவன். 

இட்சுவாகு:

சூரிய குல மைந்தன்.