இடபன் | : | வானரப் படைத் தலைவன். காளை போன்றவன். குடதிசையில் சீதையைத் தேடச் சென்றவன். |
இடும்பன் | : | வானர வீரன். |
இந்திரசித் | : | இராவணன் மைந்தன். இந்திரனை வென்றதால் 'இந்திரசித்' எனப் பெயர் பெற்றவன். |
இந்திரத்யும்நன் | : | திருமால் பக்தன். அகத்தியர் சாபத்தால் யானையாகப் பிறந்து முதலை வாய்ப்பட்டுத் திருமாலால் வீடு பேறு அடைந்தவன். |
இந்திரன் | : | சரபங்க முனிவரை இந்திரலோகம் அழைத்துச் செல்ல வருகையில், காட்டில் இராமனைக் கண்டு போற்றியவன். |
இரகுமன்னன் | : | சூரியகுல வேந்தன். |
இரணியன் | : | பிரமனது மகனாகிய மரீசி பிரஜாபதியின் மகனான காசிப முனிவர்க்குத் திதி என்பவளிடம் பிறந்தவன். இரண்யாட்சனின் தம்பி, பிரலாகதனின்தந்தை. இரணியன் என்பதற்குப் 'பொன்னிறமானவன்' என்பது பொருள். |
இரணியாட்சன் | : | 'பொற்கணான்' என்னும் பெயரினன். பூமியைப் பாயாக்கிக் கடலில் மறைக்க, வராக அவதாரமெடுத்துத் திருமால் மீட்டதாகப் புராண வரலாறு. |
இராமன் | : | காப்பியத் தலைவன். |
இராவணன் | : | இலங்கை வேந்தன். |
இரிசிகன் | : | பிருகுவின் மகன். கௌசியை மணந்தவன். |
இருசியசிருங்க முனிவர் | : | விபாண்டக புதல்வர். மான்கொம்பைத் தலையில் கொண்டவர். கலைக்கோட்டு முனிவர் எனப்படுவார். மக்கள் பேறு வாய்க்கும் யாகம் செய்தவர். |
இரேணுகாதேவி | : | சமதக்னி முனிவரின் மனைவி. |
இலக்குவன் | : | இராமன் தம்பி. சுமத்திரையின் மகன். |
இலங்காதேவி | : | இலங்கையின் காவல் தெய்வம். அனுமன் அவளை வென்றதால் நகர் நீங்கிச் சென்றாள். |
உத்தானபாதன் | : | மனுகுலத்து வேந்தன். உரோமபாதன் தந்தை. |
உதாசித்து | : | பரதனின் மாமன். |