பக்கம் எண் :

786யுத்த காண்டம் 

உருமை

:

சுக்கிரீவன் மனைவி.

உரோமபாதன்:

உத்தானபாதனின் மகன். கலைக்கோட்டு
முனிவரின் மாமன்.

உல்காமுகன்:

வானரப் படைத்தலைவன்.

ஊர்மிளை:

சனகன் தம்பி குசத்துவன் மகள். இலக்குவனின்
மனைவி.

ஊர்வசி:

தேவநங்கை. இலங்கையில் இராவணன் ஆட்சியில்
குற்றேவல் புரிந்து வந்தவள்.

ஏமை:

ஹேமை. அசுரனாகிய மயனால் காதலிக்கப்பட்டவள்
என்பது வான்மீகம். சுயம்பிரபையின் தோழி.

ககுத்தன்:

சூரியகுல மன்னன்

கங்காதேவி:

பகீரதனால் உலகில் நதியாகிப் பெருகியவள்.

கசகோமுகன்:

மற்போரில் வல்ல வானரத் தலைவன்.

கந்தமாதனன்:

வானரப் படைத்தலைவன்.

கபில முனிவர்:

தன்னைப் பழி கூறியதால் சகரன் புத்திரர்களைச்
சாம்பலாக்கியவர்.

கயன்:

கஜன்; யானை போன்ற வடிவமுடைய வானரத் தலைவன்.

கரன்:

இராவணன் தாய்மாமன் மகன். தண்டகாரண்யத்தில்
சூர்ப்பணகைக்குத் துணையாக இருந்தவன்.

கருடன்:

அருணனின் தம்பி. போர்க்களத்தில் நாகபாசம்
நீக்கியவன்.

கவந்தன்:

தலையற்று, வயிற்றில் வாய், கண் ஆகியவற்றை
உடைய கொடிய வடிவினன். இராமனை எதிர்த்துச்
சாபம் நீங்கப் பெற்றவன்.

கவயன்:

வானர வீரன்.

கவயாக்கன்:

கவயாக்ஷன், பசுவின் கண்போன்ற கண்களை
உடையவன். 'கோலங்கூலம்' என்னும் கொண்டை
முசுக்களுக்குத் தலைவன்.

காசிபன்:

காசியப முனிவர். தக்கன் மகளிர் பதின்மூவரை
மணந்து சுர, அசுரர் முதலியோரைப் படைத்தவர்.
இம்முனிவருக்கும் அதிதி தேவிக்கும் திருமால்