| | வாமனனாக அவதரித்தார். இம்முனிவர்க்கும் திதிக்கும் பிறந்தவர்கள் அசுரர்கள். |
காதி | : | குசநாபனது மகன். |
கார்த்தவீரியார்ச்சுனன் | : | ஆயிரந்தோள்களை உடையவன். பரசுராமன் அவற்றை வெட்டி வென்றனன். |
காலகேயர் | : | ஒருவகை அசுரர். |
காலசங்கன் | : | அரக்கன். |
காலநேமி | : | இரண்யாட்சன் மகன். தந்தை இறந்தபின் திருமாலோடு போரிட்டு மடிந்தவன். |
காலன் | : | இலக்குவனால் கொல்லப்பட்ட ஓர் அசுரன். |
கியாதி | : | பிருகுவின் மனைவி. |
கிருதாசி | : | குசநாபனது மனைவி. |
கிலிஞ்சன் | : | விராதன் தந்தை. |
குகன் | : | சிருங்கி பேரியர்கோன். வேடர தலைவன். இராமனால் தம்பியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன். |
குசத்துவன் | : | சனகன் தம்பி. |
குசநாபன் | : | குசன் மகன். மகோததி நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். |
குசன் | : | 1. பிரமதேவனின் மகன். மனைவி வைதர்ப்பி. 2. குசனின் முதல் மகன். மூலநூலில் 'குசாம்பன்' எனக் காணப்படுகிறது. எனவே 'குசன்' என்பது 'குசாம்பன்' என்பதன் விகாரம் என்பர். கவுசாம்பியைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தவன். |
கும்பகர்ணன் | : | குடம் போன்ற காதுகளை உடையவன். இராவணன் தம்பி. |
கும்பன் | : | கும்பகர்ணன் மகன். |
கும்பானு | : | அரக்கர் தலைவன். இடும்பனால் அழிந்தவன். |
குமுதன் | : | வானர வீரன். ஆம்பல் நிறமுடையவன். |
குமுதாக்கன் | : | வானர வீரன். |
குமுதி | : | ஓர் அரக்கி. |
குருதியின்கண்ணன் | : | சோணிதாட்சன். அரக்கர் படைத் தலைவன். |