சாரன் | : | இராவணனின் ஒற்றன். |
சிங்கன் | : | அசுரன் பனசனால் மடிந்தவன். |
சித்தார்த்தன் | : | பரதனிடம் தூது சென்ற நால்வருள் ஒருவன். |
சிபி | : | சூரியகுல வேந்தன். புறாவின் பொருட்டுத் துலை புக்கவன் |
சீதை | : | காவியத் தலைவி. |
சுக்கிரீவன் | : | அழகிய கழுத்துடையவன். சூரியன் மைந்தன். வாலியின் தம்பி. |
சுக்கிரபகவான் | : | மகாபலியின் அமைச்சரும் குருவும் ஆவார். மன்னன் வாமனனுக்கு மூன்றடி மண் தருகையில் தடுத்தவர். அதனால் ஒரு கண் இழந்தவர். |
சுகன் | : | இராவணனின் ஒற்றன். |
சுகேசன் | : | சுமாலியின் தந்தை. |
சுகேது | : | இயக்கன், சரண் என்பவனது மகன். |
சுசேடணன் | : | சுசேஷன். தாரையின் தந்தை. வருணனின் மகன். |
சுதாகன் | : | நூறு வேள்விகளைச் செய்த சூரிய குல வேந்தன். |
சுதீக்கணன் | : | முனிவர். |
சுந்தன் | : | தாடகையின் கணவன். அகத்தியர் சாபத்தால் சாம்பலானவன். |
சுந்தோபசுந்தர் | : | சுந்தன், உபசுந்தன் எனும் உடன்பிறப்பாளர். |
சுபாகு | : | தாடகையின் இரண்டாவது மகன். இராவணனுக்கு மாமன். |
சுபாரிசன் | : | அரக்கன். அங்கதனால் மாண்டவன். |
சுமதி | : | காசிப முனிவருக்கு விநதையிடம் தோன்றியவள். சகரனின் இரண்டாவது மனைவி. |
சுமந்திரர் | : | தசரதனின் அமைச்சரும் சாரதியும், நல்ல ஆலோசனை உடையவர் எனப் பொருள் படுபவர். |
சுமாலி | : | இராவணன் தாய் கேசகி என்பவளின் தகப்பன். சுகேசன் என்னும் அரக்கனின் மகன். மாரீன், சுபாகுவிற்கு அடைக்கலம் அளித்தவன். |
சுமத்திரை | : | தசரதனின் இளையதேவி. இலக்குவன் தாய். |