தாடகை
| : | சுகேதுவின் மகள், அகத்தியரால் சாபம் பெற்ற அரக்கி. சுந்தன் மனைவி. சுபாகு, மாரீசன் ஆகியோரின் தாய். |
தாரை | : | வாலியின் மனைவி. |
தாரன் | : | ருமையின் தந்தை. தேவகுருவாகிய பிரகஸ்பதியின் புதல்வன். |
தாருகன் | : | 1. அசுரன் மகளாகிய மாயை என்னும் மறுபெயருள்ள அரசை என்பவள் காசிப முனிவர் அருளால் பெற்ற புதல்வர் மூவருள் சூரபதுமனுக்கும் சிங்கமுகனுக்கும் இளையவன். யானை முகத்தோடு பிறந்தவன். 2. அரக்கன். அதிகாயனுக்குத் துணையாகச் சென்றவன். |
தானியமாலை | : | இராவணன் மனைவி. அதிகாயன் தாய். |
திதி | : | காசிபன் மனைவி. புத்திரர் 66 கோடி அசுரர். |
திலோத்தமை | : | தேவநங்கை. |
திரிசங்கு | : | அயோத்தி வேந்தன். கௌசிக முனிவர் தவ வலிமையால் இவனுக்கெனத் 'தனி உலகம்' உருவாக்கப்பட்டுத் 'திரிசங்கு சுவர்க்கம்' எனப்பட்டது. |
திரிசடை | : | வீடணன் மகள். |
திரிசடன் | : | இராமன் காடு செல்கையில் பசு தானம் பெற்ற அந்தணன். |
திரிசிரன் | : | 1. திரிசிரஸ், கரனுடன் வந்த படைவீரன். 2. இராவணன் புதல்வர்களுள் ஒருவன். |
தீர்க்கபாதன் | : | நீண்ட கால்களை உடையவள். சீதையைக் குடதிசையில் தேடச் சென்ற வானர வீரன். |
துந்து | : | ஓர் அரசன். |
துந்துபி | : | எருமைக்கடாவின் வடிவினன். மாயாவியின் உடன் பிறப்பு. மயன் என்னும் அசுரன் மைந்தன். வாலியால் கொல்லப்பட்டு, எலும்பு மலையாகக் கிடந்தவனை இலக்குவன் கடலில் வீழச் செய்தான். |
துமிந்தன் | : | தேவ வைத்தியர்களான இரட்டையர் அசுவினி தேவர்களின் அம்சத்தால் பிறந்த இருவரில் ஒருவன். |
துவிந்தன் | : | வானரப் படைத் தலைவன். |
துர்த்தரன் | : | பஞ்சசேனாபதிகளுள் ஒருவன் |