பரசுராமன் | : | சமதக்னி முனிவரின் மைந்தன். தந்தை கட்டளைப்படி தாய் இரேணுகாதேவியைக் கொன்றவன். கார்த்த வீரியார்ச்சுனனை வென்றவன். |
பாசகர்ணன் | : | பஞ்சசேனாபதிகளுள் ஒருவன். |
பிசாசன் | : | இராவணனுக்கு ஆலோசனை கூறும் படைத்தலைவன். |
பிரகத்தன் | : | அரக்கர் படைத்தலைவன். நீலனால் மாண்டவன். |
பிரகலாதன் | : | இரணியன் மைந்தன். |
பிரமதத்தா | : | குசநாபன் பெற்ற மகளிரை மணந்தவன். |
பிரமன் | : | சீதை தீப்புகல் நிகழ்ச்சியின்பின், இராமனது உண்மை இயல்புகளை உணர்த்தியவர். |
பிரஹஸ்தன் | : | அரக்கர் சேனைத்தலைவன். |
பிருது | : | தசரதன் முன்னோன். |
பிருகு | : | முனிவர். |
புகைநிறக் கண்ணன் | : | தூமிராட்சன். அரக்கர் படைத்தலைவன். |
புஞ்சிகஸ்தலை | : | தேவநங்கை. இராவணன் இவளை வலியப்பற்ற, அதனால் சினந்த நான்முகன் இராவணனைச் சபித்தான். |
மகரக் கண்ணன் | : | மகராட்சன், மகரம் போன்ற கண்களை உடையவன். கரன்புதல்வன். இந்திரசித்தின் தேர்ச்சக்கர காவலாகச் சென்றவன் தப்பி வந்து, மீண்டும் போர் புரிந்து மாண்டவன். |
மகாபாரிசுவன் | : | படைத்தலைவன். அங்கதனால் மாண்டவன். |
மகோதரன் | : | இராவணன் படைத்தலைவன். |
மண்டோதரி | : | இராவணன் மனைவி. மயன் மகள். |
மத்தன் | : | போர் மத்தன். அரக்கன். |
மதங்கமுனிவர் | : | 'ரிசியமுக மலைக்கு வரின் தலைவெடித்து இறப்பான்' என வாலிக்குச் சாபமிட்டவர். |
மந்தரை | : | கைகேயி தோழி. கூனி. |
மயன் | : | அசுர சிற்பி. |
மயிடன் | : | அதிகாயன் இலக்குவனிடம் அனுப்பிய தூதன். |