10. நாடுகாண் காதை




135

கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்



132
உரை
135

        கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து - கொழுவிய கொடியாக நீண்ட அறுகையும் குவளையையும் சேர்த்து, விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி - விளங்கும் நெற்கதிரோடே தொடுத்த மாலையை ஏரிலே அணிந்து, பார் உடைப்பனர் போல் - நிலத்தைப் பிளப்பவரைப் போல, பழிச்சினர் கைதொழ - போற்றுவார் வணங்க, ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும் - ஏரைப் பூட்டி நின்றோர் பாடுகின்ற ஏர் மங்கலப் பாட்டும் ;

        அறுகையும் குவளையையும் கதிரோடு தொடுத்த விரியல் என்க. இது பொன்னேர் எனவும், சில விடங்களில் நல்லேர் எனவும் கூறப்படும்.