|
1 |
பாட்டு
மாயவனது வருகையையும் குழலோசையையும்
பாடுதல
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ ;
|
|
"கன்று
குணிலா ......... தோழீ" கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன் - வஞ்சத்தால் வந்துநின்ற
ஆவின் கன்றினைக் குணிலாகக் கொண்டு அங்ஙனமே நின்ற விளவின் கனியை உதிர்த்த கண்ணன்,
இன்று நம் ஆனுள் வருமேல் - இற்றைப் பொழுது நம் வழிபாட்டால் நம் பசு நிரையிடத்து வருவானாயின்,
அவன் வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி - அவன் வாயினால் ஊதுகின்ற கொன்றைக்
குழலின் இனிய இசையைக் கேட்போம் தோழீ ;
குணில் - குறுந்தடி. ஆனுள் : உள் ஏழுனுருபு ; மேல்வருவனவும் இன்ன. தோழீ கேளாமோ என்க.
கேளாமோ. ஈரெதிர்மறை ஓருடன்பாடு; பின்வருவனவும் இன்ன. |
|