|
2 |
அறுபொரு ளிவனென்றே
யமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே யுலகடைய வுண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
|
|
"அறுபொருள்...........மருட்கைத்தே"
அறுபொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே
- தீர்ந்த பொருள் இவனே எனக் கொண்டு தேவர் கூட்டம் வணங்கிப் போற்ற நீ மிக்க
பசி ஒன்று இல்லாது எல்லா உலகங்களையும் உண்டாய், உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய்
உண்ட வாய் - அங்ஙனம் உலகமுண்ட வாய் களவின்கண் உறிக்கண் உள்ள வெண்ணெயை உண்ட வாயாகும்,
வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே - வளவிய துழாய் மாலையை உடையாய் இஃது ஒரு
மாயமோ மிகவும் மருட்கையினை யுடைத்தாயிருந்தது;
வண்டுழாய் மாலையாய் என்பதனை முதற்கண் உரைக்க.
அறு பொருள் - தீர்ந்தபொருள் ; அறுதியிடப்பட்ட பொருள் ; இனி, இதற்கு ஐயமற்ற பொருள்
என்றும், அறுவகைச் சமயத்தாரும் துணிந்த பொருள் என்றும் கூறுவாருமுளர். உறுபசி - உற்றபசியுமாம்.
அடைய - முழுவதும். |
|