மூலம்
7. ஆய்ச்சியர் குரவை
1
கொளு
காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்
வேரி மலர்க்கோதை யாள் ; சுட்டு
1
உரை
1
கொளு - குரவைக் கூத்திற்குக் கருத்து.
. "காரிகதன்.........கோதையாள்" காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ் வேரி மலர்க் கோதையாள் - இக் காரி எருத்தின் சீற்றத்தினை அஞ்சானாய்ப் பாய்ந்து தழுவியோனை இத் தேனிறைந்த மலர்மாலையையுடையாள் விரும்புவாள் ;
காரி - கருமையுடையது. கதன் - சீற்றம். கோதையாள் காமுறும் என்க.
சுட்டு - இது முதற்சுட்டு.