மூலம்
7. ஆய்ச்சியர் குரவை
2
நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்
பொற்றொடி மாதராள் தோள் ;
2
உரை
2
"நெற்றிச் செகிலை..........மாதராடோள்" நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய இப் பொன் தொடி மாதராள் தோள் - நெற்றிக்கண் சிவந்த சுட்டியினையுடைய ஏற்றினை வலி தொலைத் தானுக்கே இப் பொன்னாலாய வளையினையணிந்த மாதருடைய தோள்கள் உரியனவாகும் ;
செகில் - சிவப்பு; ஆகுபெயர்.