பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்39


O

இது-

வெட்டுக்கிளிகளின்

திறந்தவெளிச் சிறைச்சாலை.

O

இது-

வாழ்க்கை முழுவதும்

அடித்துத் திருத்தப்பட்டு

மரணத்திற்குப்பிறகும் படிக்கப்படாத

மணல்வரிக்கவிதை.

O

இது-

வடிந்துவிட்ட சிலைகளைக் கூட ...

வசமிழந்துபோன

வாசற்படிகளாகவே

கருதுகின்ற-

இலக்கிய இடிபாடுகளின்

இறுக்கமான வெற்றிடம்.

O

வாடகைக்கு வீடுகேட்டு

வீதிகளையே விற்றுவிடுகிற ...

கொள்ளைக்காரச் சிலந்திகளின்

கொலுமண்டபம்.